அணு ஆயுதங்கள் குறித்து புடின் நகைச்சுவை செய்யவில்லை: ஆபத்தின் விளிம்பில் இருப்பதாக ஜோ பைடன் எச்சரிக்கை
அணுஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்து புடின் கேலி செய்யவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை.
1962 இல் கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு அணு ஆயுதப் போரின் மிகப்பெரிய அச்சுறுத்தல் இது எனவும் அறிவிப்பு.
அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் "நகைச்சுவை செய்யவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜனநாயகக் கட்சி நன்கொடையாளர்கள் மத்தியில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார்.
AFP via Getty Images
அதில் தற்போதைய சூழ்நிலையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடனும், உலகம் அணு ஆயுத விளிம்பில் இருந்த காலத்துடனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்பிட்டு பேசினார்.
உக்ரைனில் போரில் தனது தோல்விக்கு பதிலளிக்கும் விதமாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக புடின் வழங்கி வரும் அச்சுறுத்தல், 1962இல் கியூபா ஏவுகணை நெருக்கடியைப் போன்றது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் உக்ரைனில் போராட்டங்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது பற்றி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் "நகைச்சுவை செய்யவில்லை" எனவும் ஜோ பைடன் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
Getty Images/iStockphoto
300,000 அவசரகால படைகளை அணி திரட்டுவதற்கான அவரது முடிவு மற்றும் சிறப்பு நடவடிக்கை பற்றிய அவரது தவறான கருத்துக்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் புடினின் நிலைமை இன்னும் ஆபத்தானதாகி வருகிறது.
இந்தநிலையில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஜியா ஆகிய இடங்களில் உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது, அத்துடன் கெர்சன் நகரின் பல குடியிருப்புகளை உக்ரைன் ஆயுதப் படை விடுவித்தும் வருகிறது.
AFP via Getty Images
ரஷ்யாவின் கோட்பாட்டின் படி, ரஷ்ய பிரதேசமாக கருதப்படும் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களை கொண்டு, ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை நியாயப்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: வேல்ஸ் இளவரசர் வில்லியமின் செயலால்…பள்ளி மாணவன் எடுத்துள்ள விபரீத முடிவு
இத்துடன் ஜோ பைடன் எச்சரிக்கையை அமெரிக்க உளவு அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது, அதில் தற்போதைய ரஷ்யாவின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக நம்புவதாக தெரிவித்துள்ளது.