லண்டனைத் தாக்கும் திறன்... உலகின் மிகப்பெரிய ஏவுகணைக் குவியலை உருவாக்கும் ஈரான்
ஆயத்துல்லா அலி காமெனி வழிநடத்தும் ஈரான் அரசாங்கம், உலகின் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணைக் குவியலை உருவாக்கி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
ஏவுகணைக் குவியல்
அத்துடன், லண்டன் வரை தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களையும் உருவாக்கி வருவதாக இஸ்ரேல் தனது சமீபத்திய பதிவில் தெரிவித்துள்ளது.
ஈரானுடன் 12 நாட்கள் நீடித்த கடும் மோதலில் அந்த நாட்டின் அணுசக்தி நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டதா என்ற கேள்வி விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையிலேயே இஸ்ரேல் தற்போது ஏவுகணைக் குவியல் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானின் அணு ஆயுதம் உருவாக்கும் திட்டத்தை மொத்தமாக சிதைத்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தாலும், வெளிவரும் தகவல்கள் அது உண்மையல்ல என்றே உறுதி செய்கிறது.
இதனாலையே, இஸ்ரேல் தற்போது ஈரானின் ஏவுகணைத் திட்டம் தொடர்பில் பேசத் தொடங்கியுள்ளது. மட்டுமின்றி, இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஓரன் மார்மோர்ஸ்டீன் தெரிவிக்கையில்,
உலகின் முதல் நாடாக
ஜூன் 13 அன்று ஈரான் மீதான தாக்குதலின் நோக்கம் அணுசக்தி நிலையங்களை ஒழிப்பது மட்டுமல்ல என்று கூறியுள்ளார். இஸ்ரேல் இரண்டு இருத்தலியல் அச்சுறுத்தல்களுக்காக ஈரானை தாக்கியது என குறிப்பிட்டுள்ள ஓரன், ஒன்று அணுசக்தி அச்சுறுத்தல் மற்றொன்று பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல் என்றார்.
இஸ்ரேல்-ஈரான் போருக்கு முன்பு, ஈரானிடம் 3,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்ததாக அமெரிக்காவால் மதிப்பிடப்பட்டது. ஆனால் காமெனி அரசாங்கம் ஏவுகணைகளின் உற்பத்தியை 20,000 ஆக அதிகரிக்கும் நடவடிக்கையின் நடுவில் இருந்தது என்று இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் அதிக எண்ணிக்கையில் குவித்துவைத்திருக்கும் உலகின் முதல் நாடாக மாறும் திட்டமும் ஈரானிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |