30 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட பறவை இனம்.., தற்போது அழிந்துவிட்டதாக அறிவிப்பு

By Sathya Nov 20, 2024 10:33 AM GMT
Report

காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட பறவை இனம் தற்போது அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

பறவை இனம்

ஸ்லெண்டர்-பில்ட் கர்லேவ் (Slender-billed Curlew) என்று அழைக்கப்படும் புலம்பெயர்ந்த கடற்கரைப் பறவை இனம், பல வருட தேடுதலுக்கு பிறகு நவம்பர் 2024 ல் இறந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இது ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் இருந்து ஒரு பறவை இனத்தின் முதல் அறியப்பட்ட அழிவைக் குறிக்கிறது என்று பறவைகள் பாதுகாப்பிற்கான ராயல் சொசைட்டி (RSPB) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஸ்லெண்டர்-பில்டு கர்லேவ் என்ற பறவை கோடைகாலத்தில் சைபீரியாவில் இனப்பெருக்கம் செய்வதாக அறியப்பட்டது.

விசா நடைமுறை மற்றும் நேரடி விமான சேவை.., இந்தியாவிடம் வலியுறுத்திய சீனா

விசா நடைமுறை மற்றும் நேரடி விமான சேவை.., இந்தியாவிடம் வலியுறுத்திய சீனா

பின்னர், குளிர்காலத்தில் மற்ற புலம்பெயர்ந்த பறவைகளைப் போலவே வெப்பமான பகுதிக்கு பறக்கின்றன. இருப்பினும், மற்ற பறவைகள் தெற்கே வெப்பமண்டலங்கள் அல்லது அவுஸ்திரேலியாவிற்கு பறந்து சென்றாலும் இந்த வகை பறவை இனங்கள் மத்திய தரைக்கடல் நோக்கி செல்கின்றன.

அங்கு சென்றவுடன் அதன் கரையில் மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் காலத்தை அனுசரித்துச் செல்வதால் சிறப்பாக உயிர்வாழ்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பல தசாப்தங்களாக அதன் இனப்பெருக்கம் மற்றும் இனப்பெருக்கம் அல்லாத வரம்புகளில் ஸ்லெண்டர்-பில்ட் கர்லேவின் ஆதாரங்களைக் கண்டறிய விரிவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

30 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட பறவை இனம்.., தற்போது அழிந்துவிட்டதாக அறிவிப்பு | Bird Species Thought To Be Extinct Recorded Case

ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. கடைசியாக 1995 -ம் ஆண்டில் மொராக்கோவில் ஸ்லெண்டர்-பில்ட் கர்லேவ் காணப்பட்டது.

2001 -ல் இருந்ததாக சொல்லப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தப் பறவை பூமியில் இருப்பதற்கு 96 சதவீதம் வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.

தற்போது, அதிகாரப்பூர்வமாகப் பறவை அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சில சமயங்களில் அழிந்துவிட்டதாக நம்பப்படும் இனங்கள் அவை சில இடங்களில் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இருப்பினும், சமீபத்திய ஆய்வின்படி பறவை அழிந்துவிட்டதாக அறிவிக்கும் முன், அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் உட்பட பல காரணிகளைக் ஆசிரியர் கருத்தில் கொண்டுள்ளனர்.

இந்த பறவை அழிந்துவிட்டதாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) சிவப்பு பட்டியலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். தற்போது இந்த பறவையானது 'அழியும் அபாயத்தில்' பட்டியலிடப்பட்டுள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US