பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி... இந்த நாட்டின் முடிவால் இந்தியாவுடன் கைகோர்க்கும் சீனா
பாகிஸ்தானை மொத்தமாக பழி தீர்க்கும் வகையில் சீனாவுடன் இணைந்து ரஷ்யா - இந்தியா - சீனா என மூன்று நாடுகளின் கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி தற்போது வலுவடைந்துள்ளது.
ரஷ்யா முன்முயற்சி
கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தான் மோதல்களுக்குப் பிறகு, இரண்டு தெற்காசிய ஜாம்பவான்களுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்த ரஷ்யா முன்முயற்சி எடுத்த பிறகு இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஒரு முக்கியமான ராஜதந்திர முயற்சி என்று அழைக்கப்படக்கூடிய வகையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதற்றம் கணிசமாகக் குறைந்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகரில் நடைபெற்ற Forum of the Future-2050 கூட்டத்தில் உரையாற்றிய அவர், ரஷ்யா-இந்தியா-சீனா (RIC) கூட்டமைப்பின் தடைபட்ட பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இப்படியான ஒரு கூட்டமைப்பு அமைந்தால் அது தென்கிழக்கு ஆசியாவின் புவிசார் அரசியல் இயக்கவியலுக்கு மட்டுமல்ல, ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கும் உலகிற்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வெடித்த போது பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான தகவல்களை பகிர்ந்து இந்தியாவிற்கு எதிராக சீனா மிகப்பெரிய உதவி செய்துள்ளது. இதனால் சீனா மீது இந்தியா கடும் கோபத்தில் இருந்தது.
அமெரிக்காவை கட்டுப்படுத்த
மட்டுமின்றி ரஃபேல் உட்பட இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்த பாகிஸ்தானுக்கு சீனா உதவியது. போர் என்றால் இழப்புகள் இருக்கும் என விவரங்களைத் தெரிவிக்காமல் தளபதி அனில் சவுகானும் இழப்புகளை ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையிலேயே ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. ரஷ்யா-இந்தியா-சீனா கூட்டணியால் தடைபட்ட பணிகளை மீட்டெடுக்க முடியும் என்று உண்மையிலேயே நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த இரண்டு வருடங்களாக நாம் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்தில் சந்திக்கவில்லை, ஆனால் இந்த விவகாரம் குறித்து எனது சீன சகாவுடனும், இந்திய வெளியுறவுத் துறைத் தலைவருடனும் விவாதித்து வருகிறோம் என செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய உலகத்தை, குறிப்பாக அமெரிக்காவை கட்டுப்படுத்த ரஷ்யா-இந்தியா-சீனா கூட்டணியை ரஷ்யா ஆதரிப்பது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
இப்படியான ஒரு கூட்டணி உருவானால், சீனாவை மொத்தமாக நம்பியிருக்கும் பாகிஸ்தானிற்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |