நீங்கள் இல்லாமல் எப்படி வாழ்வேன்! திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போதே விதவையான மணப்பெண்... வெளியான புகைப்படங்கள்
ரஷ்யாவில் திருமணம் நடைபெற்ற நாளில் மாப்பிள்ளை சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் நீங்கள் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன் என அவரின் மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் உள்ள வலாசோவோ என்ற கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Radu Cordinianu (34) என்ற ஆணுக்கும் Christina என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது புதுமணத்தம்பதி நடனமாடி கொண்டிருந்தனர்.
அப்போது மணப்பெண்ணின் உறவினர்களான Alexey D. மற்றும் Vladimir D அங்கு இருந்த போது மணமகன் Radu மற்றும் அவர் சகோதரர் Philipஉடன் அவர்களுக்கு சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து ஆத்திரமடைந்த Alexey D. மற்றும் Vladimir D இருவரும் சேர்ந்து Radu மற்றும் Philip-ஐ துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
தனது கண்முன்னர் கணவர் உயிரிழந்ததை கண்டு Raduவின் மனைவி Christina அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையில் Christina சமூகவலைதளத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவில், "என் அன்பானவரே, நீங்கள் இல்லாமல் நான் எப்படி வாழப் போகிறேன்? நான் எப்போதும் உங்கள் மனைவியாக இருப்பேன். இதற்கு நான் சத்தியம் செய்கிறேன். எனக்கு நீ மட்டுமே இருக்கிறாய். நாம் இருவரும் என்றென்றும் ஒன்றாக இருப்போம். மேலே இருந்து என்னைப் பாருங்கள், உங்கள் கனவுகளை நான் நிறைவேற்றுவேன். இந்த வலியில் இருந்து வெளியில் வர நான் முயல்வேன்" என பதிவிட்டுள்ளார்.

