புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த பிரித்தானியா திட்டம்: அதிரவைக்கும் தகவல்
ஒரு மாதத்திற்கு 3,000க்கும் அதிகமான புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் திட்டம் ஒன்று பிரித்தானியாவில் தயாராகிவருகிறது. லீக் ஆன ஆவணங்கள் சிலவற்றிலிருந்து இந்த அதிரவைக்கும் தகவல் கிடைத்துள்ளது.
தலை தப்பிய உள்துறைச் செயலரின் பயங்கர திட்டம்
விதிமீறலில் ஈடுபட்டு, பிரதமரால் பதவி காப்பாற்றப்பட்ட உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், சட்டவிரோத புலம்பெயர்தல் மசோதா ஒன்றை நிறைவேற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.
Photograph: Toby Melville/Reuters
புலம்பெயர்தல், பிரதமரின் கட்டுப்பாட்டை மீறிப்போய்விட்டதாக ரிஷி சுனக் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு பயங்கர திட்டத்தை வைத்திருப்பதாலோ என்னவோ, ரிஷி, சுவெல்லாவின் பதவியைக் காப்பாற்றிவிட்டார் போலும் என எண்ணத் தோன்றுகிறது.
3,000க்கும் அதிகமான புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் திட்டம்
சுவெல்லாவின் சட்டவிரோத புலம்பெயர்தல் மசோதாவின்படி, அனுமதியின்றி பிரித்தானியாவுக்குள் நுழைவோர், இனி பிரித்தானியாவில் தங்கி புகலிடம் கோர முடியாது. அதற்கு பதில், அவர்கள் கைது செய்யப்பட்டு, காவலில் அடைக்கப்பட்டு, தங்கள் சொந்த நாட்டுக்கோ அல்லது ருவாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கோ நாடுகடத்தப்படுவார்கள்.
Le Monde
இது தொடர்பான ஆவணங்கள் லீக் ஆகியுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் முதல், 1,600 பேரை தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கவும், 2024 ஜனவரியிலிருந்து, 3.163 பேரை தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கவும் திட்டம் தயாராகிவருவது தெரியவந்துள்ளது.
அதாவது, ஜனவரியிலிருந்து, மாதந்தோறும் 3.163 புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படலாம்.
ஆக, பிரித்தானியா ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கைது செய்து நாட்டை விட்டுத் துரத்த தயாராகிவருகிறது என்கின்றன புலம்பெயர்தல் ஆதரவு தொண்டு நிறுவனங்கள்.