ட்ரம்பால் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் பிரித்தானிய நிறுவனங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கான பிரித்தானிய நிறுவனங்களின் ஏற்றுமதி வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது.
மிகக் குறைந்த தொகை
ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கு 4.1 பில்லியன் பவுண்டுகள் (5.6 பில்லியன் டொலர்) மதிப்பிலான பொருட்களை பிரித்தானியா ஏற்றுமதி செய்துள்ளது, இது மார்ச் மாதத்தில் 6.1 பில்லியன் பவுண்டுகள் என பதிவாகியிருந்து என்று பிரித்தானியாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, பிப்ரவரி 2022 க்குப் பிறகு மிகக் குறைந்த தொகை என்பதுடன் 1997 இல் மாதாந்திர பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிகக் கடுமையான சரிவு இதுவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 பில்லியன் பவுண்டுகள் வீழ்ச்சி என்பது 33 சதவீத சரிவென்றே கூறுகின்றனர். அமெரிக்காவிற்கான ஜேர்மனியின் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 10.5% குறைந்துள்ளதாகக் கடந்த வாரம் கூறியது.

ரூ.324,000 கோடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி... பிரித்தானியாவின் உயரிய விருது வாங்கிய இந்தியர்
இந்த நிலையில், வரிகளில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பைத் தவிர்ப்பதற்காக மார்ச் மாதத்தில் கூடுதல் பொருட்களை நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ததால் இந்த வீழ்ச்சி ஓரளவுக்குப் பிரதிபலித்ததாக பிரித்தானிய வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஏப்ரல் மாத பொருட்கள் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 15% குறைவாக இருந்தது. இந்த நிலையில், பிரித்தானிய வர்த்தக சபையின் வர்த்தகக் கொள்கைத் தலைவர் வில்லியம் பெய்ன் தெரிவிக்கையில்,
பொருளாதார விளைவுகள்
அமெரிக்க வரிகளின் பொருளாதார விளைவுகள் தற்போது நிஜமாகிவிட்டன. ஆயிரக்கணக்கான பிரித்தானிய ஏற்றுமதியாளர்கள் குறைந்த ஆர்டர்களையும், அதிக விநியோகத் தொடர்புகள் மற்றும் வாடிக்கையாளர் செலவுகளைச் சமாளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளுக்கான மொத்த பிரித்தானிய ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு பிரித்தானியா அமெரிக்காவிற்கு 59.3 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலானப் பொருட்களை ஏற்றுமதி செய்து 57.1 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலானப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
மார்ச் 12 அன்று அமெரிக்கா பிரித்தானியாவின் எஃகு மற்றும் அலுமினியம் மீது 25% வரிகளை விதித்தது, ஏப்ரல் தொடக்கத்தில் கார்கள் இறக்குமதி மீதான வரிகளை 27.5% ஆகவும், பிற பொருட்களுக்கு 10% முழுமையான வரியை விதித்தது.
கடந்த மாதம் எஃகு, அலுமினியம் மற்றும் கார்கள் மீதான கூடுதல் வரிகளை நீக்குவதற்கான ஒப்பந்தத்தின் வரைவை பிரித்தானியா ஒப்புக்கொண்டது. ஆனால் அது இன்னும் அமுலுக்கு வரவில்லை. மட்டுமின்றி பிற பொருட்களுக்கு 10% வரி நடைமுறையில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |