கிரேக்க சொர்க்கத் தீவில் சூரியக் குளியலின்போது உயிரிழந்த பிரித்தானியர்
கிரேக்க தீவு ஒன்றில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
73 வயது பிரித்தானியர்
கிரீஸின் Skiathos தீவின் அகியா பராஸ்கேவிற்கு 73 வயது பிரித்தானியர் ஒருவர் சுற்றுலாவுக்கு சென்றுள்ளார்.
அவர் கிரேக்க சொர்க்கத் தீவு கடற்கரையில் சூரிய குளியல் ஓய்வு எடுத்துள்ளார். அப்போது சக பயணிகள் அவரை அசைவற்று இருந்த நிலையில் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அந்நபருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் அருகில் உள்ள சுகாதார மையத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஒருவரால் பரிசோதிக்கப்பட்டார்.
சுமார் 40 நிமிடங்கள் பிரித்தானியரை உயிர்ப்பிக்க அவர் முயன்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார்.
பிரேத பரிசோதனை
அந்நபரின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை, மேலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து FCDO செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "கிரேக்கத்தில் இறந்த ஒரு பிரித்தானிய நபரின் குடும்பத்திற்கு நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். மேலும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்' என தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த மாதம் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவர் கிரேக்க கடற்கரையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |