சிங்கப்பூரில் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருந்த பிரித்தானியர் மனைவியை பார்ப்பதற்காக செய்த செயல்! விபரீதத்தில் முடிந்த ஆசை
சிங்கப்பூரில் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருந்த பிரித்தானியர், மனைவியை பார்க்க விதியை மீறியதாக நீதிமன்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூருக்கு வருபவர்கள் தற்போது நாட்டின் பயண தனிமைப்படுத்தப்பட்ட விதியின் ஒரு பகுதியாக ஒரு ஒதுக்கப்பட்ட அறையில் 14 நாட்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் Ritz-Carlton Millenia-ல் தனிமைப்படுத்தலில் இருந்த 52 வயதான பிரித்தானியர் Nigel Skea, சுமார் 3 முறை விதியை மீறி ஹோட்டலில் இருந்து தப்பிச்சென்ற, அவரது வருங்கால மனைவியாக இருந்த Agatha Maghesh Eyamalai-ஐ சந்தித்ததாக நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பிப்ரவரி 26ம் திகதி இந்த வழக்கில் தண்டனையை அறிவிக்கவுள்ளதகாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்குரைஞர்கள் Skea-ஐ நான்கு வாரங்கள் சிறையில் அடைக்கவும், 1,000 சிங்கப்பூர் டொலர் அபராதமாக விதிக்கவும் வாதிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் Nigel Skea வழக்கறிஞர் ஒரு வாரம் சிறைத்தண்டனை அல்லது அபராதம் கேட்டு வாதிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் விதிகளை மீறியதற்காக இதுவரை எந்த பிரித்தானியாரும் சிறையில் அடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
