குரோஷியாவில் பேருந்து விபத்து...12 மேற்பட்ட மத போதகர்கள் பலி
கிறிஸ்துவ மத போதகர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து வடக்கு குரோஷியாவில் உள்ள நெடுஞ்சாலையில் தவறி விழுந்ததை அடுத்து இதில் 12 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
தெற்கு போஸ்னியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயமான மெட்ஜுகோர்ஜேவுக்கு பயணித்த பேருந்து, தலைநகர் ஜாக்ரெப்பில் இருந்து வடக்கே 30 மைல் (50 கிமீ) வடக்கு குரோஷியாவில் உள்ள நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை தவறி விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 12 பேர் வரை உயிரிழந்து இருப்பதுடன், 31 பேர் வரை காயமடைந்துள்ளனர், இவற்றில் 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
Pic: Reuters
பேருந்து ஓட்டுநர் தூங்கியதே விபத்திற்கான காரணம் என மாநில தொலைக்காட்சி நெட்வொர்க் HRT தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் போலந்து நாட்டு குடிமக்கள் என போலந்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டிவிஎன் 24 செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
Pic: AP
தெற்கு பொஸ்னியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயமான மெட்ஜுகோர்ஜேவுக்கு பயணிகள் பயணம் செய்ததாக குரோஷிய உள்துறை அமைச்சர் டேவர் போசினோவிக் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: 18 வயது மகளை கொன்றுவிட்டு... தற்கொலைக்கு முயன்ற ஜெர்மனியில் இருந்து கோவா வந்த தாய்
இந்த எதிர்பாராத விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Pic: AP