சரிந்தது Byjus சாம்ராஜ்யம் - ரவீந்திரனுக்கு சிறைத்தண்டனை ஏன்?
பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பைஜூஸ் ரவீந்திரன்
கேரளாவை சேர்ந்த 46 வயதான ரவீந்திரன் கடந்த 2011 ஆம் ஆண்டில் Byjus என்ற போட்டி தேர்வுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனத்தை உருவாக்கினார்.

இந்த நிறுவனம் பாரிய வரவேற்பை பெற்றதோடு, 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் EduTech யூனிகார்ன் என்ற பெருமையை பெற்றது.
2016 ஆம் ஆண்டில் மெட்டா நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கிடமிருந்து நிதியை பெற்ற முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 22 பில்லியன் டொலர் மதிப்பை எட்டியது. உலக முதலீட்டாளர்கள் பலரும் Byjus ல் முதலீடு செய்தனர். 2013 - 23 காலக்கட்டத்தில் ரூ.28,000 கோடி அந்நிய முதலீட்டை பெற்றது.
சுமார் 3 பில்லியன் டொலருக்கு பல்வேறு நிறுவனங்களை கைப்பற்றியதோடு, இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக சில ஆண்டுகள் இருந்தது.
6 மாதம் சிறைத்தண்டனை
ஆனால், அதன் பின்னர் முதலீட்டாக பெற்ற நிதியை வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயன்படுத்தியது, பிரச்சினையாக உருவெடுத்தது.
மேலும், 2021 - 22 நிதி ஆண்டு அறிக்கையில் சுமார் ரூ.4,588 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிய வந்தது.

ஊழியர்கள் முறையாக ஊதியம் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர். ஏராளமான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது.
மேலும், ரவீந்திரனின் சொத்து மதிப்பை பூஜ்யமாக அறிவித்தது போர்ப்ஸ் நிறுவனம்.
இதனை தொடர்ந்து, கடனை திரும்பப்பெற கடன் வழங்கிய முதலீட்டாளர்கள் அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பிப்ரவரி 2024 இல், இந்தியாவின் பொருளாதார புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்பான அமலாக்க இயக்குநரகம், பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு எதிராக தேடுதல் அறிவிப்பை வெளியிட்டது.

ரவீந்திரன் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் உள்ள நிலையில், பைஜூஸில் முதலீடு செய்துள்ள கத்தார் ஹோல்டிங்ஸ் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சொத்துக்கள் தொடர்பான உத்தரவுக்கு கீழ்ப்படியாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற செலவுகளுக்காக 70,500 டொலர் (சுமார் ரூ.58 லட்சம் ) செலுத்த வேண்டும், பீயார் இன்வெஸ்ட்கோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர் அவர்தான் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தன் தரப்பில் எந்தத் தவறும் இல்லை என ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்தும், சிறையில் அடைப்பதற்கான உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி விண்ணப்பிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்" என பைஜூஸ் நிறுவன வழக்கறிஞர் கிளாரன்ஸ் லன் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |