இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்துமாறு பிரித்தானியாவை வலியுறுத்தும் பிரபலங்கள்
இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி திறந்த கடிதம் ஒன்றில் பாப் நட்சத்திரம் துவா லிபா உட்பட சுமார் 300 இங்கிலாந்து பிரபலங்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் பங்களிப்பை
சட்டத்தரணிகள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து இதேபோன்ற வேண்டுகோள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், இசைக்கலைஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் பிற பிரபலங்கள் பலர், காஸாவில் நடக்கும் பயங்கரங்களில் பிரித்தானியாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரித்தானிய-அல்பேனிய பாப் பாடகியான துவா லிபா, காஸாவில் நடந்த போர் குறித்து குரல் கொடுத்து வருகிறார், கடந்த ஆண்டு இஸ்ரேலின் தாக்குதலை இனப்படுகொலை என்றும் விமர்சித்துள்ளார்.
ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் பலமுறை மறுத்து வருகிறது, மேலும் 2023 அக்டோபரில் பாலஸ்தீன போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸ் படைகளை ஒடுக்கவே நடவடிக்கை முன்னெடுப்பதாகக் கூறுகிறது.
காஸா முழுவதும் முழுமையான மனிதாபிமான அணுகலை உறுதி செய்யவும், உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்யவும், இஸ்ரேலுக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் உடனடியாக நிறுத்தவும் பிரித்தானிய பிரபலங்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரித்தானிய சட்டத்தரணிகள்
இந்த மாத தொடக்கத்தில், காஸாவில் இஸ்ரேலின் புதிய இராணுவத் தாக்குதலை ஸ்டார்மர் கடுமையாக சாடினார், மேலும் அது நிறுத்தப்படாவிட்டால் மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
மட்டுமின்றி, கடந்த செப்டம்பரில் பிரித்தானிய அரசாங்கம் இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 உரிமங்களை நிறுத்தி வைத்தது, அவை மனிதாபிமான சட்டத்தை மீறுவதற்குப் பயன்படுத்தப்படலாம் என விளக்கமளித்தது.
இந்த வாரம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 800க்கும் மேற்பட்ட பிரித்தானிய சட்டத்தரணிகள், சுமார் 380 பிரித்தானிய மற்றும் ஐரிஷ் எழுத்தாளர்களும், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்வதாக திறந்த மடல்கள் மூலம் எச்சரித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |