5ஆம் தலைமுறை போர் விமானத்தை 50% தள்ளுபடியில் பாகிஸ்தானுக்கு விற்கும் சீனா - இந்தியாவிற்கு ஆபத்தா?

Pakistan China India
By Karthikraja Jun 09, 2025 08:25 AM GMT
Report

பாகிஸ்தான் 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை, 50% தள்ளுபடியில் சீனாவிடமிருந்து வாங்குகிறது.

5 ஆம் தலைமுறை போர் விமானங்கள்

பாகிஸ்தான் தனது ஆயுதக் கையிருப்பில் 81 சதவீதத்தை, அதன் அண்டை நாடான சீனாவிடமிருந்து வாங்கி வருகிறது.

தற்போது, 30 J-35A ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை, சீனா 50 சதவீத தள்ளுபடி விலையில் பாகிஸ்தானுக்கு விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

5ஆம் தலைமுறை போர் விமானத்தை 50% தள்ளுபடியில் பாகிஸ்தானுக்கு விற்கும் சீனா - இந்தியாவிற்கு ஆபத்தா? | China Deliver J35A Jet To Pakistan Threat To India

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா

ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு சீனா இந்த போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு கையளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சீனாவிடமிருந்து பெறும் முதல் நாடாக பாகிஸ்தான் உள்ளது.

சீனா மக்கள் விமர்சனம்

சீனாவின் இந்த முடிவிற்கு, சமூக ஊடக தளங்களில் சீன குடிமக்களிடமிருந்து பரவலான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் ஏற்கனவே சீனாவிடமிருந்து வாங்கிய J-10 விமானங்களுக்கு இன்னும் முழு தொகையும் செலுத்தவில்லை. மேலும், IMF வழங்கும் நிதியை நம்பியே பாகிஸ்தான் செயல்படும் சூழல் உள்ளது.  

5ஆம் தலைமுறை போர் விமானத்தை 50% தள்ளுபடியில் பாகிஸ்தானுக்கு விற்கும் சீனா - இந்தியாவிற்கு ஆபத்தா? | China Deliver J35A Jet To Pakistan Threat To India

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஏன் இந்த விமானங்களை வழங்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இந்த விமானங்கள் இன்னும் சோதனை அடிப்படையிலே உள்ளன. சீனா விமான படையில் கூட இன்னும் ஐந்தாம் தலைமுறை J-35A விமானங்கள் சேர்க்கப்படவில்லை. 

பாகிஸ்தானை விட அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல்

பாகிஸ்தானை விட அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல்

இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதன் மூலம், களத்தில் இந்த போர் விமானங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பரிசோதிக்கவே, சீனா இந்த விமானங்களை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு ஆபத்தா?

சமீபத்தில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலில், இந்தியா சில விமானங்களை இழந்திருந்தாலும், இந்த மோதலில் இந்தியாவின் கையே ஓங்கியிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த மோதலில், சீனாவிடம் இருந்து வாங்கிய J10 விமானங்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும், அதன் அடிப்படையிலே இந்த J-35A விமானங்களை வாங்குவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 

5ஆம் தலைமுறை போர் விமானத்தை 50% தள்ளுபடியில் பாகிஸ்தானுக்கு விற்கும் சீனா - இந்தியாவிற்கு ஆபத்தா? | China Deliver J35A Jet To Pakistan Threat To India

இந்த சூழலில், மூலோபாய ரீதியாக, பிராந்திய சமநிலையை பாகிஸ்தானுக்கு சாதகமாக மாற்ற சீனாவின் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இந்த போர் விமானங்கள், 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட PL-15 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

தற்போது வரை, இந்தியாவிடம் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் இல்லை. Rafel போன்ற 4.5 ஆம் தலைமுறை போர் விமானங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. 

மேலும், இந்தியா சொந்தமாக தனது ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. ஆனால், 2035 ஆம் ஆண்டிலே இந்த விமானங்களை தயாரித்து, இந்திய விமான படையில் சேர்க்கப்படும். 

5ஆம் தலைமுறை போர் விமானத்தை 50% தள்ளுபடியில் பாகிஸ்தானுக்கு விற்கும் சீனா - இந்தியாவிற்கு ஆபத்தா? | China Deliver J35A Jet To Pakistan Threat To India

இதனால், இந்தியா 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை கொள்முதல் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

மேலும், J-35A வை தாக்கியழிக்கும் வகையில், இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US