இந்தியாவுக்கு பேராபத்து! இலங்கை தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தையும் வளைத்து போடும் சீனா? வெளிவரும் தகவல்

Srilanka India China SrilankaNorth Tamilan
By Kaviarasan Sep 02, 2021 11:35 AM GMT
Report

இலங்கை தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தை சீனா வளைத்து போட துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே தன்னுடைய கட்டிற்குள் கொண்டு வர துடிக்கும், சீனா அதற்கான வேலைகளை கொஞ்சம், கொஞ்சமாக செய்து வருகிறது என்றே சொல்லலாம். உயிரி ஆயுதம் என்ற கொரோனாவை சீனா தான் பரப்பியுள்ளது என்ற அமெரிக்கா போன்ற நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஆனால் இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இதற்கிடையில் சீனா, இந்தியா எல்லை பிரச்சனை உள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் இலங்கையின் தென்பகுதியில் வலுவாக காலூன்றியிருக்கும், அடுத்ததாக ஈழத்தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தையும் வளைத்து போடத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு பேராபத்து! இலங்கை தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தையும் வளைத்து போடும் சீனா? வெளிவரும் தகவல் | China Expands Its Activities To Sri Lanka North

இப்பகுதியில் காற்றாலை, மீன் வளர்ப்பு திட்டங்களுக்காக சீனாவுக்கு இலங்கை நிலம் ஒதுக்கி தந்துள்ளதாகவும், இது தமிழக கடல் பகுதியிலிருந்து மிக மிக அருகில் சீனா நெருங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கும் பேராபத்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அண்டை நாடுகளை ஓட விட்டு, தென் சீன கடலை மொத்தமாக ஆக்கிரமித்த சீனா, அடுத்ததாக ஆசியாவின் முடிசூடா மன்னனாக தன்னை வளப்படுத்திக் கொள்ள, இந்திய பெருங்கடலைக் குறிவைத்துள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

இதற்காக இந்திய பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்தையும் தனது காலடியின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாம். ஏற்கனவே பாகிஸ்தானை தன் வசம் ஆக்கிக் கொண்டா சீனா, இலங்கையையும் மெல்ல மெல்ல தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.

இந்தியாவுக்கு பேராபத்து! இலங்கை தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தையும் வளைத்து போடும் சீனா? வெளிவரும் தகவல் | China Expands Its Activities To Sri Lanka North 

ஒருகாலத்தில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த இலங்கை, கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பின் மொத்தமாக மாறிவிட்டது. இப்போது சீனாவுடன், இலங்கை நெருக்கம் காட்டி வருகி்றது. கடன் கொடுத்து நாடுகளை வளைக்கும் வித்தையை இலங்கையிலும் சீனா காட்ட துவங்கியுள்ளது.

பல்வேறு வளங்கள் நிறைந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுக்கு சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் புதிய பட்டுப் பாதை திட்டத்திற்கு முக்கியத் துறைமுகமாக இருக்கும் என்பதால், இதன் மூலம் சீனாவின் ராணுவத் தளமாக இப்பகுதி மாறிவிடும் ஆபத்து உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டையை கைப்பற்றிய சீனா, இலங்கையின் தென் பகுதியில் வலுவாக காலூன்றிய நிலையில், தற்போது ஈழத்தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண பிராந்தியத்திலும் நுழையத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு பேராபத்து! இலங்கை தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தையும் வளைத்து போடும் சீனா? வெளிவரும் தகவல் | China Expands Its Activities To Sri Lanka North

இலங்கையின் வடக்கே மன்னார் வளைகுடா பகுதியில் பிரமாண்ட காற்றாலைகளை நிறுவி மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை இலங்கை முன்னெடுத்தது. இத்திட்டத்தை யாழ்ப்பாணத்தில் 3 தீவுகளில் சீன நிறுவனங்களுடன் சேர்ந்து செய்ய இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கு ஏற்கனவே இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, வடக்கு மாகாண கடலோர கிராமங்களில் கடல் அட்டை வளர்ப்பு திட்டத்திற்காக சீனாவுக்கு இலங்கை அரசு நிலம் ஒதுக்கி தந்துள்ளது.

இதுமட்டுமின்றி வடக்கில் பல உள்கட்டமைப்பு திட்டங்களையும் செய்ய சீனா தயாராகி வருகிறது. அம்பாந்தோட்டை கன்னியாகுமரியிலிருந்து சுமார் 300 கி.மீற்றர் தொலைவில் உள்ளது. ஆனால், காற்றாலை திட்டங்களை செயல்படுத்த சீனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தமிழக கடல் பகுதியில் இருந்து வெறும் 50 கி.மீற்றர் மட்டுமே உள்ளன.

இந்த அளவுக்கு சீனா, இந்தியாவுக்கு மிக மிக அருகில் நெருங்கி வருவது நிச்சயம் பேராபத்தே என இந்திய கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுவரை சீனா தன்னுடைய இராஜதந்திரம் இலங்கை, பாகிஸ்தானை தவிர இந்திய பெருங்கடலை ஒட்டிய சீசெல்ஸ், மொரீஷியஸ், மாலத்தீவு, வங்க தேசம், மியான்மர் மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவுக்கு பேராபத்து! இலங்கை தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தையும் வளைத்து போடும் சீனா? வெளிவரும் தகவல் | China Expands Its Activities To Sri Lanka North 

இந்திய பெருங்கடலை சீனா ஆக்கிரமிப்பதில் மிகப்பெரிய தடையாக இருப்பது இந்தியா மட்டுமே. ஏற்கனவே பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை அரசு, கொரோனாவால் மேலும் தடுமாற்றத்தை கண்டது.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடும் தட்டுப்பாடு காரணமாக, சர்க்கரை ஒரு கிலோ 200 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. பருப்பு 250 ரூபாய் ஆக அதிகரித்தது.

அரிசி உள்ளிட்ட அன்றாட பொருட்கள் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பொருளாதார அவசர நிலையயை இலங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.

இதன்படி இனி அத்தியவாசிய பொருட்களை பதுக்குவது, அதிக விலைக்கு விற்பதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு பேராபத்து! இலங்கை தமிழர்களின் வாழ்விடமான வடக்கு மாகாணத்தையும் வளைத்து போடும் சீனா? வெளிவரும் தகவல் | China Expands Its Activities To Sri Lanka North

இது குறித்து இந்திய கடற்படை பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், சீனா தனது கொள்ளையடிக்கும் கடன் கொள்கைகளின் மூலம் ஏற்கனவே இலங்கைக்குள் ஆழமான ஊடுருவிள்ளது.

இப்போது, முடிந்தவரை இந்திய கடல் பகுதிக்கு அருகில் தனது இருப்பை நிலைநிறுத்துவதற்கு உறுதியுடன் செயல்படுகிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சீனாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பிரச்னையாக அமையலாம். இது நிச்சயமாக கவலை அளிக்கிறது. இந்த விஷயத்தை இந்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.                 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US