ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை - ஒரு வாரத்தில் உயிரிழந்த சிறுமி
ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளர்.
ரூ.8.2 கோடியில் மரபணு மாற்று சிகிச்சை
சீனாவில் மேய்(mei) என்ற புனைபெயர் கொண்ட 6 வயது சிறுமி, அறிவாற்றல் வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்திய ஒரு அரிய மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார்.

நரம்பியல் நிபுணர் ஜிலாங் சியு தலைமையில் இந்த சிறுமிக்கு மரபணு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சையில், மூளைக்குள் ஊடுருவும் வகையில் வடிவமைக்கப்பட்ட டிரில்லியன் கணக்கான வைரஸ்களைத் தண்டுவடத்தில் செலுத்தியுள்ளனர். ஆனால் சிகிச்சை நடந்த ஒரு வாரத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த சிகிச்சைக்காக மேயின் பெற்றோர் தங்களது சேமிப்பு மற்றும் கடன் வாங்கி மொத்தமாக 8.60 லட்சம் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.8.25 கோடி) அதிகமாக கட்டணம் செலுத்தியுள்ளனர்.
ஆனால்,மரபணுத் திருத்த சிகிச்சைக்கான விலங்கு சோதனைகள் குறித்து எழுதிய ஆய்வு கட்டுரையில் சிறுமியின் உயிரிழப்பு குறித்து சிலோங் கியூ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த சிகிச்சையில் உள்ள அபாயங்கள் குறித்தும் பெற்றோருக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி விசாரணை குழு அமைத்துள்ளது. விசாரணையின் முடிவுகளுக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |