உண்மையை ஒப்புக்கொண்டது சீனா! அம்பலமான முக்கிய தகவல்
நாட்டின் கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக சீனாவின் உயர் நோய் கட்டுப்பாட்டு அதிகாரி ஒப்பு்ககொண்டுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் தலைவர் Gao Fu, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக பெரிய அளவிலான பாதுகாப்பை வழங்கவில்லை என கூறினார்.
தடுப்பூசிகளின் செயல்திறனை அதிகாரிக்க தடுப்பூசிகளை கலப்பது தொடர்பில் சீனா ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார்.
தடுப்பூசி செயல்முறையை மேம்படுத்த டோஸ்கள் மற்றும் இடைவெளி நாட்களை மாற்றியமைப்பது உட்பட நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கமளித்தார்.
ஆனால் பின்னர் அவர் தனது கருத்துக்களிலிருந்து பின்வாங்கிய Gao Fu, உலகிலுள்ள அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பு அளவு சில சமயம் அதிகமாகவும், சில சமயம் குறைவாகவும் இருக்கும் என கூறினார்.
அவற்றின் செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளால் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு கேள்வி.
சீன தடுப்பூசிகளுக்கு குறைந்த பாதுகாப்பு விகிதம் இருப்பதாக அவர் முன்னர் ஒப்புக்கொண்டது தவறான புரிதல் என்று Gao Fu கூறினார்.