ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வெற்றி, ஈரான் மீதான அவரின் போர் உள்ளிட்டவையை முன்பே கணித்துள்ள சீனப்பேராசிரியர், அடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்பதை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள கணிப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று காரணிகள்
சீனப்பேராசிரியரான Xueqin Jiang பல்வேறு அரசியல் சார்ந்த கணிப்புகளை வெளியிட்டு, அவை அப்படியே நிறைவேறியுள்ளது. 2024ல் அவர் வெளியிட்டிருந்த ஈரான் பொறி என்ற விரிவுரை காணொளி மில்லியன் கணக்கானோர் இதுவரை பார்வையிட்டுள்ளனர்.

அதில் அவர், அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் வெல்வார் என்றால், ஈரான் மீது போர் தொடுப்பார் என குறிப்பிட்டிருந்தார். மேலும், அமெரிக்காவின் முதற்கட்ட படையெடுப்பு வெற்றிகரமாக முடிந்து, அமெரிக்கப் படைகள் ஈரானுக்குள் முன்னேற முடிவு செய்தால், ஈரானின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் விரைவில் சிக்கிக் கொண்டு சின்னாபின்னமாவார்கள் என்றே பேராசிரியர் Xueqin Jiang கணித்துள்ளார்.
பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்த ட்ரம்ப், வெளியிட்ட காணொளி ஒன்றில், தாக்குதலை நியாயப்படுத்தி இருந்தார். இதையே Xueqin Jiang முன்பே கணித்திருந்தார்.
ஈரானிய ஆட்சியையும் கண்டித்திருந்த ட்ரம்ப், இராணுவ பலம் அமெரிக்காவின் நலனுக்காகவே என்றும் வாதிட்டார். இந்த நிலையில், ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க கூட்டு நடவடிக்கையை கிமு 415 இல் ஏதென்ஸின் சிசிலி படையெடுப்பை ஒத்திருப்பதாக பேராசிரியர் Xueqin Jiang கணித்துள்ளார்.
இந்தப் படையெடுப்பானது பெலோபொன்னேசியப் போரின் போது நிகழ்ந்தது. தளபதிகளான அல்சிபியாட்ஸ் மற்றும் நிசியாஸ் இணைந்து ஒரு லட்சிய முயற்சியைத் தொடங்கினர், ஆனால் அவர்களின் எதிரிகளின் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டனர், இது இறுதியில் ஏதெனியன் பேரரசை பலவீனப்படுத்தியது.
தற்போது ஈரான் மீதான அமெரிக்காவின் படையெடுப்புக்கு மூன்று காரணிகளை Xueqin Jiang பட்டியலிட்டுள்ளார். இஸ்ரேலின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும்,
மத்திய கிழக்கில் மொத்தமாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் இந்த போருக்கு தூண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த இரண்டு காரணிகளில் ஒன்று அமெரிக்காவை உலகளாவிய பேரரசாக மாறற வேண்டும் என்ற ட்ரம்பின் ஆசை, இன்னொன்று சவுதி அரேபியாவுடனான ஈரானின் மோதல் போக்கு.
ஈரானின் இருப்பை சவுதி அரேபியா அச்சுறுத்தி வருகிறது. இரு நாடுகளும் நீண்ட காலமாக ஒரு மறைமுகப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மூன்று காரணிகளிலும் ட்ரம்ப் மையமாக இருப்பதால், ட்ரம்ப் வழியாகவே இந்த மூன்று காரணிகளும் நிறைவேறும்.
மூன்றாவது முறையாக ஜனாதிபதி
ஈரான் மீது 2027 மார்ச் மாதம் ட்ரம்ப் முழு அளவிலான படையெடுப்பை முன்னெடுப்பார் என்றே Xueqin Jiang கணித்துள்ளார். ட்ரம்புடன் இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் களமிறங்கும்.

இவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் போலந்து நாடுகள் நிலைக்கொள்ளும். முழு அளவிலான போருக்கு முன்னர் ட்ரம்ப் தொலைக்காட்சியில் இதை அறிவிப்பார்.
ஈரானிய மக்கள் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விரும்புகிறார்கள் என்று கூறி ட்ரம்ப் படையெடுப்பை நியாயப்படுத்துவார். ஆனால், ஈரான் மீது ட்ரம்ப் முன்னெடுக்கும் இந்த படையெடுப்பு தோல்வியில் முடியும் என்றே Xueqin Jiang கணித்துள்ளார்.

ஈரான் அமெரிக்காவுடன் இப்படியான ஒரு மோதலுக்குத் தயாராகவே உள்ளது, மேலும் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற குழுக்கள் உட்பட அதன் பலம் இந்தப் போரில் முழுமையாக வெளிபப்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் அமெரிக்க இராணுவம் 21 ஆம் நூற்றாண்டின் போரை எதிர்த்துப் போராடுவதற்காக வடிவமைக்கப்படவில்லை, இதனால் அமெரிக்காவிற்கு மிக மோசமான பேரழிவு என்பது ஈரானுக்கு தரைப்படைகளை அனுப்புவதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதில் மிக முக்கிய திருப்பமாக, தரைப்படைகள் ஈரானுக்கு அனுப்பப்பட்டால், ட்ரம்ப் அவசரகால போர் அதிகாரங்களுக்கு நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் கோரலாம், இது அவருக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவியை வழங்கக்கூடும் என்றும் பேராசிரியர் Xueqin Jiang கணித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |