அண்டை நாட்டின் மீது போர்தொடுக்கும் சீனா? கூறிய பதில்
தைவான் மீது சீனா போர் தொடுக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அந்நாட்டின் சீன செய்தித் தொடர்பாளர் பதில் அளித்துள்ளார்.
சீனா, தைவான்
தனது அண்டை நாடான தைவான் மீது சீனா உரிமைகோரி வருகிறது. ஆனால், தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடென கூறி வருகிறது.
என்றாலும், கடந்த 5 ஆண்டுகளாகவே தைவான் மீது சீனா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வரும் சூழலில், தைவான் மீது சீனா எப்போது வேண்டுமானாலும் போரை ஆரம்பிக்கும் என அமெரிக்க எச்சரித்து வருகிறது.
இந்த நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தைவானின் ஆளும் கட்சி சுதந்திரத்தை நோக்கி செல்வது ஆபத்தானது என்று சாடியுள்ளார்.
மேலும் அவர், தைவானை திருடியது ஜப்பான்தான் என்றும், 1943ஆம் ஆண்டு கெய்ரோ பிரகடனத்தின்படி தைவானை சீனாவுக்கு திரும்ப அளிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
தேவை இல்லை
அத்துடன் அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, தைவான் விவகாரங்களுக்கான சீன செய்தித் தொடர்பாளர் ஜூ ஃபெங்லியன் பதிலளித்தார்.
அவர், "தைவான் ஏற்கனவே சீனாவின் ஒரு பகுதிதான். எனவே தைவான் மீது போரை ஆரம்பிக்க தேவை இல்லை" என்றார்.
சீனாவின் இந்த பதில் அரசியல் பதற்றங்கள் நிலவி வரும் சூழலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |