”ஒரு நாடு, இரண்டு அமைப்பு” சீனா முன்மொழிந்த மாதிரியை நிராகரித்த தைவான்
- சீனா முன்மொழிந்த ”ஒரு நாடு இரண்டு அமைப்பு” மாதிரியை நிராகரித்தது தைவான்
- தைவானின் எதிர்காலத்தை மக்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
சீனா இந்த வாரம் முன்மொழிந்த ”ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்" மாதிரியை தைவான் நிராகரிப்பதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வியாழன்கிழமை தெரிவித்துள்ளது.
தீவு நாடான தைவானை தனது நாட்டின் பகுதியாக சீனா தொடர்ந்து அறிவித்து வரும் நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைபே சுற்றுப்பயணம் அப்பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைவானை அச்சுறுத்தும் வகையில் தீவு நாட்டை சுற்றி சீனா தனது போர் பயிற்சியை கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை நடத்தியது.
இந்தநிலையில் சீனா இந்த வாரம் வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஒன்றில் ”ஒரே நாடு இரண்டு அமைப்புகள்” என்ற ஒப்பந்தத்தை முன்மொழிந்தது.
REUTERS
ஆனால் சீனாவால் முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்த மாதிரியை தைவான் நிராகரிக்கிறது என்று சுயராஜ்ய தீவின் வெளியுறவு அமைச்சகம் வியாழன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக தைவானின் தேசிய தின உரையில் ஜனாதிபதி சாய் இன்-வென் தெரிவித்த கருத்தில், தீவு மற்றும் நிலப்பரப்பை ஒருங்கிணைக்கும் சீனா பரிந்துரைத்த "ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்" சூத்திரத்தை தைவான் நிராகரிப்பதாக தெரிவித்தார்.
மேலும் சீனாவின் அத்தகைய ஏற்பாடே தற்போது ஹாங்காங்கை சீர்கேட்டின் விளிம்பில் வைத்து இருப்பதாக தெரிவித்தார்.
அத்துடன் சுயராஜ்ய தீவின் மீது சீனாவின் அழுத்தம் அதிகரிக்கும் போது தனது அரசாங்கம் சுகந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் என்று தெரிவித்தார்.
தலைநகர் தைபேவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தைவான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜோன் ஓவ் தெரிவித்த கருத்தில், தைவானின் எதிர்காலத்தை மக்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: பாதசாரிகள் மீது காரை ஏற்றிய பிரித்தானியர்...இருவர் பலி, பொலிஸார் தீவிர விசாரணை!
Presstv
சீனாவின் தற்போதைய நடவடிக்கைகள் தைவான் மக்களை மிரட்டுவதற்கு, புதிய இயல்புநிலையை உருவாக்குவதற்கான சாக்குப்போக்கை சீனா பயன்படுத்துகிறது என ஜோன் ஓவ் தெரிவித்துள்ளார்.