பிரித்தானியாவில் வீட்டிலிருந்து போதைப்பொருள் அங்காடி நடத்திய தம்பதி
இங்கிலாந்தில் வீட்டில் வைத்து போதைப்பொருள் விற்று வந்த கணவன், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அலமாரியில் கொக்கைன் பைகள்
இங்கிலாந்தின் டோர்செட் மாகாணத்தின் விம்போர்ன் நகரைச் சேர்ந்த தம்பதியினர் புரூக் மார்ஷல் (35), கிராண்ட் புட்மேன் (33). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவர்களது வீட்டில் இருந்து தென்மேற்கு பிராந்திய குற்றப் பிரிவின் துப்பறிவாளர்கள், மூன்று படுக்கையறை வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது சமையலறை அலமாரியில் கொக்கைன் பைகள், பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. சமையலறை மேடை முழுவதும் வெள்ளை நிறப் பொடி சிதறிக் கிடந்ததுடன், ஒரு கிலோகிராம் கொக்கைன் கட்டியைக் கொண்ட ஒரு வாளியும் காணப்பட்டது.
10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
மொத்தமாக 1.5 கிலோ கொக்கைன், 30000 பவுண்ட் மதிப்புள்ள ஹெராயின், 20000 பவுண்ட் மதிப்புள்ள கஞ்சா மற்றும் 2000 மதிப்புள்ள Ketamine ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் நடந்த விசாரணையில், வெளித்தோற்றத்தில் மரியாதைக்குரிய தம்பதியினராக தெரிந்த புரூக் மற்றும் கிராண்ட், தங்களது வீட்டில் இருந்து 'போதைப்பொருள் பல்பொருள் அங்காடி' நடத்தியது தெரிய வந்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தம்பதியினருக்கு மொத்தமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |