பிரபல கிரிக்கெட் வீராங்கனையிடம் அணி தேர்வாளர் அத்துமீறல் - நீதிமன்றம் கண்டனம்
முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையிடம் அணி தேர்வாளர் அத்துமீறல் செய்த விடயத்தில் விசாரணையை தாமதப்படுத்தியதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜகனரா ஆலம்
32 வயதான ஜகனரா ஆலம்(Jahanara Alam), 2011 ஆம் ஆண்டு முதல் வங்கதேச கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.

அயர்லாந்திற்கு எதிராக 5 விக்கெட்கள் வீழ்த்தி, வங்கதேச மகளிர் அணியில் 5 விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
மேலும், வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்ற 2018 மகளிர் டி20 ஆசியக் கிண்ணம், 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியில் ஜகனரா ஆலம் இடம் பெற்றிருந்தார். 2 ODI போட்டிகளில் அணித்தலைவியாக அணியை வழி நடத்தவும் செய்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த மகளிர் உலகக் கிண்ண தொடரின் போது, முன்னாள் வீரரும், தேர்வாளரும், மேலாளருமான மஞ்சுருல் இஸ்லாம்(manjurul islam) தன்னை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாக கண்ணீருடன் குற்றச்சாட்டு வைத்தார்.

மேலும், தன் தோள் மீது கை வைத்து மாதவிடாய் குறித்து கேட்டதாகவும், நான் அவரிடம் இருந்து விலக முற்பட்ட போது, தனக்கு எதிராக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து பலமுறை அணி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
முன்னாள் வீரரான மஞ்சுருல் இஸ்லாம், இது பொய்யான குற்றச்சாட்டு என மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தாரிக் உல் ஹக்கீம் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அமைத்தது. இதன் பின்னர் இந்த குழு 5 பேராக விரிவுபடுத்தப்பட்டது.
நீந்திமன்றம் கண்டனம்
விசாரணைக் குழு அமைக்கப்பட்டாலும், விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டுமென்றே தாமதம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
முதல்முறையாக டிசம்பர் 2 ஆம் திகதி, கால நீட்டிப்பு செய்தது பின்னர் பல்வேறு காரணங்களை கூறி அறிக்கை தாக்கல் செய்வதை தாமதப்படுத்தியது.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மகளிர் கிரிக்கெட் வீரங்கனைகளுக்கு பாதுகாப்பான, துன்புறுத்தல் இல்லாத சூழலை உறுதி செய்யத் தவறியதை ஏன் சட்டவிரோதமாக அறிவிக்கக்கூடாது என்பதை விளக்குமாறு BCBக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, BCB விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது ஐசிசியின் கவனத்திற்கு சென்றுள்ளதால், வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |