உக்ரைன் ரஷ்யா போரினால் "நெருக்கடிக்குள் நெருக்கடி" உலக வங்கி எச்சரிக்கை!
உக்ரைன் ரஷ்யா போரினால் அதிகரித்து வரும் உணவு பொருள்களின் விலையேற்றமானது, மிகப்பெரிய மனித அழிவை ஏற்படுத்தும் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரித்துள்ளார்.
வரலாற்று தரவுகளின் படி தற்போதைய உணவு கையிருப்பானது மிகப் பெரியது, மற்றும் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு அளிக்கும் அளவிற்கு உணவு கையிருப்பானது உள்ளது, ஆனால் உணவு தேவை அதிகமாக தேவைப்படும் இடங்களுக்கு உணவுகளை வழங்கவதற்கான செயல்முறையானதும் இருக்கிறது என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் நடவடிக்கையினால், உலக அளவில் அதிகரித்து வரும் உணவு ,மற்றும் எரிபொருள் மீதான விலை உயர்வு மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலும், ஊட்டச்சத்து குறைபாட்டிலும் தள்ளிவிடும் என டேவிட் மல்பாஸ் எச்சரித்துள்ளார்.
கொரோனா பெரும் தொற்றில் ஏற்பட்டது போல், தற்போது அதிகரித்து வரும் உணவு பற்றாக்குறை உலகின் ஏழை மக்களை மிகவும் தீவிரமாக பாதிக்கும், இந்த நெருக்கடியால் அவர்கள் மிகவும் குறைந்த உணவையே உட்கொள்ளவர்கள் மற்றும் பள்ளி படிப்பு போன்ற அனைத்திற்கும் அவர்கள் குறைந்த பணத்தையே வைத்து இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகரித்து வரும் இந்த உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம், கொரோனா காலத்து கடன்களை திருப்பி செலுத்த முடியாத இயலாத்தன்மையை வளர்ந்து வரும் நாடுகளின் மத்தியில் எற்படுத்தி இருப்பதாகவும், 60 சதவிகித நாடுகள் தற்போது தாங்க முடியாத கடன் சுமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சில நாடுகள் தாங்க முடியாத கடன் சுமையை விரைவில் எதிர்கொள்ள போவதாகவும், இவை ”நெருக்கடிக்குள் நெருக்கடி” என்ற தன்மை உருவாக்குகிறது எனவும் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரித்துள்ளார்.
தாங்க முடியாத கடன் சுமையை எதிர்கொள்ளவிருக்கும் நாடுகள் தற்போதே அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி விடுவது நல்லது என டேவிட் மல்பாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவை அச்சுறுத்துவதை நேட்டோ நிறுத்தினால்...தாக்குதல் நிறுத்தப்படும்: மூத்த ரஷ்ய அதிகாரி தகவல்!