இஸ்ரேலின் இனப்படுகொலை, காட்டுமிராண்டித்தனம் அனைத்து மனிதகுலத்திற்கும் அவமானம்! கொந்தளித்த கியூபா ஜனாதிபதி
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவே இல்லாமல் செல்வதாக கியூபாவின் ஜனாதிபதி Miguel Diaz-Canel கடுமையாக சாடியுள்ளார்.
21,000 பேர் பலி
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் மூன்று மாதங்களாக நடந்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய நடவடிக்கைகளின் விளைவாக, சுமார் 21,000 பேர் கொல்லப்பட்டதுடன் 54,000 பேர் காயமடைந்துள்ளனர்.
Ashraf Amra/Reuters
போர் தொடர்பில் இஸ்ரேலுக்கு பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் கியூபா ஜனாதிபதி Miguel Diaz-Canel-யும் தற்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
REUTERS/Marco Bello
Miguel Diaz-Canel கண்டனம்
அவர் தன் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், 'காஸாவில் இஸ்ரேல் என்ற பயங்கரவாத அரசு செய்த இனப்படுகொலை அனைத்து மனித இனத்திற்கும் அவமானம்.
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவே இல்லாமல், கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் மனிதகுலத்திற்கு அவமானம் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு கடுமையான காயம்.
எவ்வளவு காலம் தண்டனை, கொலைக்கு எவ்வளவு காலம் தண்டனை? கியூபா ஒருபோதும் அலட்சியமாக இருக்காது, பாலஸ்தீனத்தை பாதுகாப்பதில் தொடர்ந்து குரல் எழுப்புகிறது' என தெரிவித்துள்ளார்.
AFP/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |