ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் ஏற்பட்ட சேதம்: வெளியான புதிய செயற்கைக்கோள் படங்கள்
கடந்த வாரம் ஈரான் முன்னெடுத்த எதிர்பாராத தாக்குதலில் இஸ்ரேலில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் புதிய செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது.
பெரிதாக பாதிப்பில்லை
தொடர்புடைய படங்களை ஆய்வு செய்ததில், பெரிதாக பாதிப்பில்லை என்றே கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவியிருந்தது. இதில் தெற்கு இஸ்ரேலின் Nevatim விமானத் தளம் லேசான பாதிப்பை எதிர்கொண்டதாக கூறுகின்றனர்.
சம்பவத்தின் போது பெரும்பாலான ட்ரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியுள்ளதுடன், போர் விமானங்களும் பங்களித்துள்ளன. இதில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜோர்தான் போர் விமானங்கள் துரிதமாக செயல்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பத்து மடங்கு உக்கிரமாக
இந்த நிலையிலேயே இஸ்ரேலும் பதிலுக்கு ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்தது. ஈரான் தரப்பு அதை பொம்மை விளையாட்டு என கிண்டல் செய்துள்ளது. இன்னொரு தாக்குதலுக்கு ஈரான் தயாரில்லை என அறிவித்திருந்தாலும், இரு தரப்பும் தயார் நிலையில் இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
ஈரானுக்கான பதிலடிக்கு அமெரிக்கா ஆதரவளிக்க மறுத்துள்ளதால், இஸ்ரேல் முழுவீச்சிலான நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும், பதிலடிக்கு முயன்றால், பத்து மடங்கு உக்கிரமாக தாக்குதலை முன்னெடுப்போம் என்று ஈரானும் மிரட்டல் விடுத்துள்ளது.
இஸ்ரேலை பொறுத்தமட்டில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவை எப்போதும் நாடியிருப்பதால், ஈரானுக்கு நேரிடையாக பதிலளிக்கும் முடிவை தாமதப்படுத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |