ஹண்டர் பைடன் வழக்கில் டிரம்ப் வழக்கறிஞர் சிறப்பு ஆலோசகராக நியமனம்! அமெரிக்க அரசியலில் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் மீதான வழக்கு விசாரணையில், முன்னர் டிரம்பினால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் டேவிட் வெயிஸ் தற்போது சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோ பைடன் மகன்
கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் வருமான வரி செலுத்தாததற்காக, ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ராபர்ட் ஹண்டர் பைடன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அத்துடன் அவர் போதைப்பொருளுக்கு அடிமையானது, துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார்.
அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கறிஞரான டேவிட் வெயிஸ் தற்போது சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Jerry Habraken / The News Journal / USA Today Network
டிரம்பினால் நியமிக்கப்பட்டவர்
இவர் டொனால்டு டிரம்ப் ஆட்சியின் போது அவரால் பரிந்துரைக்கப்பட்டு, 2018யில் Delaware வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
மேலும், நியமனம் செய்யப்பட்ட உடனேயே ஹண்டர் பைடனின் குற்றச்செயல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கினார். இதனால் அமெரிக்க அரசியலில் மேலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
(AP Photo/Alex Brandon, File)(AP)