சிரியா முன்னாள் ஜனாதிபதி அசத்திற்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
சிரியா முன்னாள் ஜனாதிபதி பசார் அல் - அசத்திற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிரியா முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 54 ஆண்டுகளாக அசத் குடும்பத்தினர் ஆட்சி செய்து வந்தனர்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பசார் அல்-அசத்(Bashar al-Assad), சிரியாவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார்.

2024 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தீவிரமடைந்து போராட்ட குழுவினர் சிரியா தலைநகர் டமாஸ்கஸை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்த்தனர்.
இதனையடுத்து, ஜனாதிபதியாக இருந்த பசார் அல்-அசத், தனது குடும்பத்தினருடன் ரஷ்யாவிற்கு தப்பி சென்றார்.
[
]அதன் பின்னர், அஹ்மத் அல்-ஷரா சிரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இதனையடுத்து, மனித குலத்திற்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுத்தாக முன்னாள் ஜனாதிபதி பசார் அல்-அசத் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பசார் அல்-அசத் மற்றும் அவரது சகோதரருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
பசார் அல்-அசத் மற்றும் அவரது சகோதரர் ரஷ்யாவில் உள்ளதால் தண்டனையை நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் உள்ளது.
மேலும், அசாத் மற்றும் அவரது சகோதரரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |