இந்தியா T20 உலக கிண்ணத்தை வெல்லுமா? மௌனம் கலைத்த தோனி
இந்திய அணி T20 உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு குறித்து தோனி பேசியுள்ளார்.
T20 உலக கிண்ண தொடர்
2026 T20 உலக கிண்ண தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

இதுவரை போட்டியை நடத்தும் அணியோ அல்லது நடப்பு சாம்பியனோ, T20 உலக கிண்ணத்தை வென்றதாக இல்லை.
இந்நிலையில், இந்திய அணி T20 உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு குறித்து முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
தோனி கருத்து
இதில் பேசிய அவர், "சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஆபத்தான அணிகளில் ஒன்றாக உள்ளது. இந்த நல்ல அணிக்கு தேவையான அனைத்தும் இவர்களிடம் உள்ளது. அழுத்தம் நிறைந்த T20 வடிவத்தில் விளையாடிய பரந்த அனுபவம் அவர்களுக்கு உண்டு என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் பனி போட்டியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும், எனக்கு பனி பிடிக்காது. நான் விளையாடும் போது என்னை பயமுறுத்திய விடயங்களில் பனியும் ஒன்று. நாணய சுழற்சியில் வெல்லாத போது பனி முக்கியமான விடயமாக இருக்கும்.
போட்டியில் நிலைமை நடுநிலையாக இருந்தால், சிறந்த சில அணிகளுடனான பெரும்பாலான போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும், வீரர்களுக்கு 30 வயதிற்கு பின்னர் தான் அனுபவம் கிடைக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரைப் பொறுத்தவரை, அவர்களை விளையாட வேண்டாம் என்று யாரும் சொல்லக் கூடாது. அவர்களே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் உடற்தகுதியுடன் இருந்தால், தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினால், 2027 உலகக்கிண்ணத்தில் விளையாடலாம் என்றும், அவர்களை வயதை வைத்து நீக்குவது தவறு என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |