டோனியை கோபப்படுத்திய பிராவோ! இருவருமே செய்த தவறு: கமெராவில் பதிவான காட்சி
மும்பை அணிக்கெதிரான போட்டியில், டோனி கோபப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் போட்டியாக சென்னை-மும்பை அணி மோதும் போட்டியாகத் தான் இருக்கும். இவ்விரு அணிகளின் ரசிகர்களுமே அந்தளவிற்கு சமூகவலைத்தளங்களில் மோதிக் கொள்வர், அப்படிப்பட்ட போட்டி தான் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியது.
இதில், சென்னை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கையில் இருந்த போட்டியை மும்பை அணி கோட்டைவிட்டதால், மும்பை அணி ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.
அதே சமயம் நேற்றைய போட்டியில் அரிதான காட்சியை பார்க்க முடிந்தது. மும்பை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 17. 4-வது பந்தை சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் வீசினார்.
அப்போது மும்பை அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த சவுரப் திவாரி அந்த பந்தை பின்பக்க அடிப்பதற்கு முயற்சி செய்து தூக்கி அடிக்க, பந்தானது அங்கே மேல எழும்பியதால், கேட்ச் பிடிக்க டோனி ஓடினார்.
— Maqbool (@im_maqbool) September 20, 2021
அப்போது அந்த பக்கம் பீல்டிங் நின்று கொண்டிருந்த பிராவோவும், கேட்ச் பிடிக்க முயற்சிக்க, இறுதியில் இருவருமே கேட்ச்சை கோட்டைவிட்டனர். இதனால் கடுப்பான டோனி, பிராவோவிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், இதில் இருவரும் மீதே தவறு உள்ளது, யாரேனும் ஒருவர் தன்னுடைய கேட்ச் என்று சொல்லியிருந்தால் பிடித்திருக்கலாம், ஆனால் இருவருமே சொல்லிக் கொண்டார்களா? என்பது தெரியவில்லை.
மேலும், டோனி இப்படி கோபப்படுவது மிகவும் அரிது, இருப்பினும் சவுரப் திவாரி தான் மும்பையின் கடைசி துருப்பு சீட்டு, இந்த கேட்ச் விட்டதால், எங்கு அது போட்டியை பாதித்துவிடுவோ என்ற கோபத்தில் தான் டோனி அப்படி செய்தார்.
ஆனால், டோனி எதிர்பார்த்தது போன்று சவுரப் திவாரி அந்தளவிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, 50 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,