503 ஓட்டங்கள் குவித்து இந்தியா டிக்ளேர்: இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி
Dhruv Jurel century in Colombo: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்தது.
கொழும்பில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்தியா 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
துருவ் ஜுரேல் சதம்
கொழும்பில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய அணியில் ரிஷாப் பண்ட் 89 பந்துகளில் 63 ஓட்டங்கள் விளாசினார்.
அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்த துருவ் ஜுரேல் (Dhruv Jurel) அபாரமாக ஆடி சதம் விளாசினார்.
ஜுரேல் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 115 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும், பிரபத் ஜெயசூரியா மற்றும் கேஷாரா நுவந்தா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பிரசித் கிருஷ்ணா கொடுத்த அதிர்ச்சி
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு இரண்டாவது ஓவரில் பிரசித் கிருஷ்ணா அதிர்ச்சி கொடுத்தார்.
அவரது பந்துவீச்சில் லஹிரு உதாரா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய பிரபத் ஜெயசூரியா 2 ஓட்டங்களில் மானவ் சுதர் ஓவரில் அவுட் ஆனார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 8 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |