போரிட தயங்கும் அமெரிக்கா? காத்திருக்கும் வரலாற்று அவமானம்
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியின் அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
போரிட தயங்கும் அமெரிக்கா?
ஒருபுறம், அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், ஒப்பந்தம் இறுதியாகாத நிலையில், ராணுவ நடவடிக்கை மூலம் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முடிவில் டிரம்ப் உறுதியாக உள்ளார்.

அமெரிக்காவின் 2 பாரிய விமானம் தாங்கி போர் கப்பல்கள், மத்திய கிழக்கு கடற்பரப்பில் முகாமிட்டுள்ளது.
அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டால் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் தாக்கி அழிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஹ்ரைன் மற்றும் ஓமனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் உள்ள தமது வீரர்களை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது.

ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் சில தினங்களில் ஈரான் மீதான தாக்குதலுக்கு டிரம்ப் உத்தரவிடுவார் என்ற பதற்றம் நிலவி வருகிறது.
அவ்வாறு அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால், ஈரான் மீதான தாக்குதலாக மட்டும் இல்லாமல், இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் விரிவடையும்.
ஈரான் தன்னுடைய ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஹிஸ்புல்லா, ஹௌதி போன்ற ஆதரவு குழுக்கள் மூலம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்க முற்படும்.
அதேவேளையில், தன்னிடமுள்ள தகொலை படகுகள் மூலம் அமெரிக்கா போர் கப்பல்களை அழிக்க முயற்சிக்கும். ஒருவேளை அமெரிக்கா போர் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டால் அது அமெரிக்காவிற்கு வரலாற்று அவமானாக அமையும்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |