பிரித்தானியாவில் 4வயது சிறுமியை தாக்கிய நாய்: இறுதியில் நேர்ந்த பரிதாபம்
பிரித்தானியாவின் மில்டன் கெய்ன்ஸில் நாய் தாக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாய் தாக்கி சிறுமி பலி
பிரித்தானியாவில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நெதர்ஃபீல்டில் உள்ள பிராட்லேண்ட்ஸ் சொத்தின் பின்புற தோட்டத்தில் நாய் ஒன்று நான்கு வயது சிறுமியை தாக்கியுள்ளது.
இதையடுத்து அந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். ஆனால் சம்பவ இடத்தில் சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Sky News
இந்த சம்பவத்தில் வேறு யாரும் காயப்படவில்லை என்றும் குழந்தையின் குடும்பத்திற்கு சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். உயிரிழப்பு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
காவல் கண்காணிப்பாளர் கருத்து:
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் மாட் புல்லிவன்ட் வழங்கிய தகவலில், நாய் தாக்கி குழந்தை கொல்லப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம், இது முற்றிலும் சோகமான சம்பவம் என தெரிவித்துள்ளார்.
Sky News
விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, இந்நிலையில் சம்பவத்தின் சரியான சூழ்நிலைகள் குறித்து ஊகிப்பது தவறானது மற்றும் உதவாது என தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதி அளிக்க விரும்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.