பிரித்தானியாவில் வறட்சி அறிவிப்பு... ஆறுகள், நீர்த்தேக்கங்களில் குறைந்து வரும் நீர் மட்டம்
நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் குறைவாக காணப்படுவதால் இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதி தற்போது வறட்சியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் மட்டம் குறைவாகவே உள்ளது
கிரேட்டர் மான்செஸ்டர், மெர்சிசைட் மற்றும் செஷயர், மற்றும் கும்ப்ரியா மற்றும் லங்காஷயர் ஆகிய பகுதிகள் நீண்ட வறண்ட வானிலையிலிருந்து வறட்சி நிலைக்கு மாறிவிட்டதாக சுற்றுச்சூழல் முகமை (EA) தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மழை பெய்த போதிலும், இப்பகுதியில் நீர் மட்டம் குறைவாகவே உள்ளது. ஆனால் நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் வறட்சி அறிவிக்கப்படல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறண்ட வானிலை வனவிலங்குகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இதில் மீன்கள், அதிக பாசிகள் பாதிக்கப்படும். நிபுணர்கள் தெரிவிக்கையில்,
100 ஆண்டுகளில்
வடமேற்குப் பகுதி கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறண்ட காலநிலையைக் கண்டது, இதனால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் குறைந்தது. நாட்டின் வடமேற்குப் பகுதி அதன் நீர் விநியோகத்தில் மூன்றில் இரண்டு பங்கை நீர்த்தேக்கங்களையே நம்பியுள்ளது.
மேலும் 2025ல் பதிவாகும் இந்த வறட்சி சிக்கலானது என்றே கூறுகின்றனர். விரைவான மக்கள்தொகை வளர்ச்சி, வெப்பமயமாதல் காலநிலை ஆகியவை நீர் விநியோகத்தில் ஏற்படும் அழுத்தத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |