விமானங்கள் ரத்து! துபாய் விமான நிலையத்தை மூழ்கடித்த கடும் மழை
துபாய் கொட்டி தீர்த்த கடும் மழையால் விமான நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், விமானங்கள் வேறு தளங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம்
துபாயில் செவ்வாயன்று பெய்த கடும் மழையால், உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகளில், விமான நிலைய ஓடுதளத்தில் ஒரு ஏரியைப் போல் தோற்றமளித்த நீரில் விமானங்கள் டாக்ஸி செல்வதையும், கார் பார்க்கிங் தளத்தின் வெள்ளத்தில் மூழ்கிய கார்களையும் பார்க்க முடிகிறது.
Dubai, United Arab Emirates, experienced significant flooding on Tuesday, attributed to heavy rainfall.
— Middle East Eye (@MiddleEastEye) April 17, 2024
Dubai International Airport (DXB) reported that there will be temporary flight diversions for arriving flights, while departures continued operation. Officials state there is… pic.twitter.com/4QSFiaMv8Q
துபாயின் சராசரி வருடாந்திர மழைப்பொழிவு அளவான 140 மிமீ முதல் 200 மிமீ அளவை இந்த மழைப்பொழிவு கிட்டத்தட்ட எட்டியுள்ளது. 25 நிமிடங்களுக்கு விமான வருகைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்த நேரத்தில், பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
தடைப்பட்ட விமான சேவை
விமான சேவைகள் இறுதியில் மீண்டும் தொடங்கினாலும், தாமதங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட விமானங்கள் என பாதிப்பு இருந்தே வந்தது.
துபாயில் தரையிறங்க திட்டமிடப்பட்ட மொத்தம் 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, அவற்றில் 15 விமானங்கள் இந்தியாவிலிருந்து வந்தவை.
Today shattered my belief in Dubai's infallible design and planning. I always thought flooding there was as likely as snow in the desert, but reality disapproved me. Despite meticulous planning, achieving 100% accuracy in long-term forecasts spanning over 25 years is beyond human pic.twitter.com/GAKUyANi1a
— David Soita Masinde. (@davimasinde) April 17, 2024
கூடுதலாக, 10 க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன, மேலும் 178 விமானங்கள் தாமதம் அடைந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான மழை விமான நிலையத்தை மட்டும் பாதிக்கவில்லை. முக்கிய ஷாப்பிங் மால்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட நகரம் முழுவதிலும் உள்ள முக்கிய கட்டமைப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |