அயர்லாந்தில் பயங்கரத்தை அரங்கேற்றிய சந்தேக நபர் குறித்த விபரம் வெளியானது!
அயர்லாந்தில் கத்திக்குத்து சம்பவத்தை நடத்தியதாக கருதப்படும் நபர் ஐரிஷ் பிரஜை என்பது தெரிய வந்துள்ளது.
கத்திக்குத்து
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள பாடசாலை ஒன்று அருகே, மர்ம நபர் ஒருவர் திடீர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதில் ஐவர் படுகாயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து கலவரம் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Reuters
ஐரிஷ் பிரஜை
இந்த நிலையில் தாக்குதல்தாரியாக கருதப்படும் நபர் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. 40 அல்லது 50 வயதிற்குட்பட்ட சந்தேக நபர் 20 ஆண்டுகளாக இங்கு வசிக்கும் ஐரிஷ் பிரஜை என்று கூறப்பட்டுள்ளது.
அவரும் கடுமையான காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். சாத்தியமான அனைத்து உந்துதல்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Reuters
இதற்கிடையில் வன்முறை சம்பவங்கள் டப்ளினில் கட்டுக்குள் வந்தாலும் அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |