இரண்டு நாட்களில் இரண்டு முறை நாடொன்றை உலுக்கிய நிலநடுக்கம்
மியான்மர் நாட்டை ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இரண்டு நாட்களில் இரண்டு முறை
இன்று புதன்கிழமை, பகல் 11.56 மணியளவில், மியான்மர் நாட்டை ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, திங்கட்கிழமையன்று ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கிய நிலையில், இரண்டு நாட்களில் இரண்டுமுறை நிலநடுக்கத்தை எதிர்கொண்டுள்ளார்கள் மியான்மர் மக்கள்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. விடயம் என்னவென்றால், ஆழமாக நிலநடுக்கங்களைவிட ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிக ஆபத்தானவையாகும்.
ஏனென்றால், ஆழமற்ற நிலநடுக்கத்தின்போது உருவாகும் அதிர்வலைகள் குறுகிய தூரமே பயணிக்கவேண்டியுள்ளதால் அவை அதிக அதிர்வுகளை ஏற்படுத்தி, கட்டிடங்களுக்கும் மக்கள் உயிருக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |