ஸ்ரேயாஸ் ஐயரின் குழந்தைகளுக்கு தாயாக விரும்பும் தமிழ்ப்பட நடிகை
ஸ்ரேயாஸ் ஐயரை மனதளவில் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக தமிழ்ப்பட நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் ஸ்ரேயாஸ் ஐயர்.
2025 ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணிக்கு தலைமை வகித்த அவர், அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார்.
மேலும், 3 வெவ்வேறு அணிகளை ஐபிஎல் இறுதிப்போட்டிகளுக்கு அழைத்து சென்ற ஒரே அணித்தலைவர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தமிழ் படத்தில் நடித்து வரும் நடிகை ஒருவர், ஸ்ரேயாஸ் ஐயரை திருமணம் செய்து கொண்டு அவரின் குழந்தைகளுக்கு தாயாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
எடின் ரோஸ்
26 வயதான எடின் ரோஸ், 18வது ஹிந்தி பிக்பாஸ் தொடரில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமானார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "என் மனதளவில் ஸ்ரேயாஸ் ஐயரை திருமணம் செய்து, அவரின் 2 குழந்தைகளுக்கு தாயாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு, உயரமான, கருமையான, தாடி மற்றும் வலிமையான உடல் ஆகிய 4 விடயங்களும் ஆண்களிடம் பிடிக்கும்.
அந்த நான்கும் ஸ்ரேயாஸ் ஐயரிடம் உள்ளது. மேலும், அவர் இந்தியாவை பிரதிநித்துவப்படுத்துகிறார். தமிழரான என் தந்தையை போல், ஸ்ரேயாஸ் ஐயரும் ஒரு தென்னிந்தியர்." என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |