காலநிலை மாற்றத்தைத் தடுக்க கடலுக்குள் அணு வெடிப்பு நடத்தலாம் - இளம் பொறியாளரின் அதிர்ச்சி யோசனை
காலநிலை மாற்றத்தைத் தடுக்க கடலுக்குள் அணு வெடிப்பு நடத்தலாம் என இளம் அமெரிக்க பொறியாளர் ஒருவர் கூறியுள்ள யோசனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயது Microsoft மென்பொருள் பொறியாளர் ஆண்டி ஹாவர்லி (Andy Haverly), புவி வெப்பமயமாதலைத் தடுக்க கடலுக்குள் அணு வெடிப்பு நடத்த வேண்டும் என பரபரப்பான யோசனையை வெளியிட்டுள்ளார்.
2025 ஜனவரியில் arXiv என்ற இணைய தளத்தில் அவர் வெளியிட்ட ஆய்வு குறிப்பில், 81 கிகாடன் அளவிலான அணு வெடிப்பை கடலின் அடிப்பகுதியில் நிகழ்த்தி, carbon sequestration செயல்முறையை வேகமாக செயல்படுத்தலாம் என அவர் கூறுகிறார்.
இந்த யோசனை தெற்கு ஹிந்தா முத்திரத்தில் உள்ள Kerguelen Plateau பகுதியில், 3-5 கி.மீ. ஆழத்தில் வெடிப்பு நடத்த வேண்டும் என பரிந்துரை செய்கிறது.
Enhanced Rock Weathering (ERW) என்ற அறிவியல் அடிப்படையில், CO₂ கார்பனேட் ஆக மாற்றப்பட்டு நிலைத்துவைக்கும் சக்தி கொண்டதாக இந்த யோசனை உருவாகியுள்ளது.
"இந்த அணு வெடிப்பு மூலம், உலகம் 30 ஆண்டுகள் வெளியிடும் கார்பன் உமிழ்வை சுத்திகரிக்க முடியும்" என ஹாவர்லி கூறுகிறார்.
ஆனால், பல விஞ்ஞானிகள் மற்றும் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த யோசனையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஸ்வீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விம்கார்டன், இது "மிகவும் ஆபத்தான" யோசனை எனக் கூறியுள்ளார். மேலும், கடல் உயிரியல், பூகம்ப அபாயம், மற்றும் அணு கதிர்வீச்சின் தாக்கங்களை யோசனையில் எடுத்துரைக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த யோசனை, 1950-களில் நடத்தப்பட்ட அணு வெடிப்பு முயற்சிகளை நினைவுபடுத்துவதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |