உக்ரைனுக்கு புதிய நிதியுதவி திட்டம்: ஐரோப்பிய ஒன்றியம் தீவிரம்!
உக்ரைனுக்கு 8 பில்லியன் யூரோக்களை வழங்கும் புதிய நிதி திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் தயாரித்து வருவதாக பாலிடிகோ மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் தாக்குதலில், உக்ரைன் மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் என பெருவாரியான உள்கட்டமைப்புகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
இவ்வாறு முற்றிலுமாக சேதமடைந்துள்ள உக்ரைனின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ரஷ்யாவின் தொடர் தாக்குதலை எதிர்த்து சண்டையிட என அனைத்திற்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன.
The European Commission has prepared a new €8 billion financial aid project for Ukraine, Politico and Reuters reported.
— NEXTA (@nexta_tv) August 6, 2022
At the end of July, the EU approved assistance to Ukraine in the amount of €9 billion. However, so far the EC has been able to send a tranche of €1 billion. pic.twitter.com/n1BWYinvov
இந்தநிலையில் உக்ரைனுக்கு சுமார் 8 பில்லியன் யூரோக்கள் வழங்கும் புதிய நிதி திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் தயாரித்து வருவதாக பாலிடிகோ மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கடந்த ஜூலை மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோக்கள் உதவி வழங்குவதாக ஒப்புதல் அளித்தது.
கூடுதல் செய்திகளுக்கு: குரோஷியாவில் பேருந்து விபத்து...12 மேற்பட்ட மத போதகர்கள் பலி
இருப்பினும் இதுவரை ஐரோப்பிய ஆணையத்தால் 1 பில்லியன் யூரோக்களை மட்டுமே வழங்க முடிந்தது குறிப்பிடதக்கது.