ஸ்பெயினுக்குள் புகுந்த 60,000 புலம்பெயர்ந்தோர்... எச்சரிக்கை விடுத்த ஐரோப்பா
ஸ்பெயினின் ஒரு பிராந்தியத்திற்குள் 60,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நுழைந்ததை அடுத்து, ஐரோப்பா மொத்தமும் பதற்றமான சூழலில் உள்ளது.
கடுமையான நடவடிக்கை
குறித்த நெருக்கடியால், அந்நாட்டிலிருந்து மக்கள் தடையின்றிப் பயணம் செய்வதை இடைநிறுத்துவதற்கான கோரிக்கைகள் எழுந்துள்ளது.

தீவிரமடைந்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் பிரான்ஸ் தனது எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது; அத்துடன், ஸ்பெயினுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷெங்கன் (Schengen) தடையற்ற பயண ஒப்பந்தத்தை இத்தாலி இடைநிறுத்தியுள்ளது.
ஷெங்கன் ஒப்பந்தம் என்பது 29 ஐரோப்பிய நாடுகளில் கடவுச்சீட்டு இல்லாமலே பயணம் செய்ய அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தமாகும். ஆனால், வட ஆப்பிரிக்காவில் உள்ள சியூட்டா என்ற தனித்த நிலப்பகுதிக்குள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் முழுமையாக ஊடுருவியதைத் தொடர்ந்து, கவலை கொண்ட அரசாங்கங்கள் ஸ்பெயினை வெளியேற்ற ஒன்று திரண்டுள்ளன.
பிரான்ஸ் தனது எல்லையில் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஸ்பெயினை அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை பின்லாந்து ஆதரித்துள்ளது.
இத்தாலிக்கும் ஸ்பெயினுக்கும் இடையே நில எல்லை இல்லை என்றாலும், இவ்விரு நாடுகளுக்கும் இடையே படகு அல்லது விமானம் மூலம் பயணம் செய்வோர் தங்கள் கடவுச்சீட்டுகளைக் காட்ட வேண்டியிருக்கும்.
இந்த நிலையில், ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் எல்லை கடப்பதைத் தடுக்கும் முயற்சியாக, பிரான்ஸ்-இத்தாலி தரைவழி எல்லையில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக இத்தாலியின் உள்விவகார அமைச்சரும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சியூட்டாப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்; அவர்களில் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்வது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 60,000 பேர் சியூட்டாவிற்குள் நுழைந்த நிலையில், அங்கிருந்து சுமார் 200 மைல் தொலைவில் உள்ள மற்றொரு பகுதியான மெலில்லாவிற்குள் மேலும் 400 பேர் நுழைந்தனர்.
நகரத்தை விட்டு வெளியேறுவது
இதனிடையே, இந்த நெருக்கடிக்குப் பிறகு சுமார் 25,000 பேர் மொராக்கோவிற்குத் திரும்பியுள்ளனர். மேலும், இந்தப் பயணத்தின்போது குறைந்தது 57 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் பெருந்திரளான மக்களிடையே ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. புலம்பெயர் மக்களின் வன்முறை மோதல்களுக்கு மத்தியில் ஸ்பானிய இராணுவம் குவிக்கப்பட்டுள்ள சியூட்டாவில்,
ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் தாங்கள் பதுங்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், கடைகளையும் வணிக நிறுவனங்களையும் பூட்டிவிட்டதாகவும் கூறுகின்றனர்; மேலும் சிலர் அந்த நகரத்தை விட்டு வெளியேறுவது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர்.

வடக்கு மொராக்கோவில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரங்களான சியூட்டா மற்றும் மெலில்லா ஆகியவை, ஆப்பிரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள ஒரே நில எல்லைகளாகும்.
இரண்டு இடங்களிலுமே குடியேறிகள் எல்லை கடக்க முயலும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன; எனினும், சமீபத்திய இந்தத் தீவிரமான முயற்சியின் அளவு முன்னெப்போதும் இல்லாததாகவே மாறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |