சீன இராணுவத்திற்கு ரகசிய பயிற்சி., அமெரிக்க முன்னாள் F-35 போர் விமான பைலட் கைது
அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரியும், F-35 போர் விமான பைலட்டுமான ஜெரால்ட் எடி ப்ரவுன் ஜூனியர் (65) இந்தியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சீன இராணுவ பைலட்டுகளுக்கு அனுமதி இல்லாமல் பயிற்சி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்க ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தை (AECA) மீறியதாகவும், சீன விமானப்படை (PLAAF) பைலட்டுகளுக்கு போர் விமான பயிற்சி வழங்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023 ஆகஸ்ட் மாதம் முதல் அவர் சீன அதிகாரிகளுடன் இணைந்து பயிற்சி திட்டங்களை மேற்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

2023 டிசம்பரில் சீனாவிற்கு பயணம் செய்த ப்ரவுன், அங்கு பல நாட்கள் சீன பைலட்டுகளுக்கு அமெரிக்க விமானப்படை தொடர்பான தகவல்களை பகிர்ந்ததாகவும், தனிப்பட்ட விளக்கக் கூட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க நீதித்துறை மற்றும் FBI அதிகாரிகள், “இது தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அமெரிக்க இராணுவத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் எதிரி நாட்டின் பைலட்டுகளுக்கு பயிற்சி அளிப்பது துரோகம்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ப்ரவுன் 24 ஆண்டுகள் அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர். F-4, F-15, F-16, A-10 உள்ளிட்ட பல நவீன போர் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். தற்போது அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US F-35 pilot arrest, Gerald Eddie Brown Jr China, US pilot training Chinese military #USPilotArrest #F35 #ChinaMilitary #NationalSecurity #USAirForce