அயர்லாந்து சேவை மையத்தில் பயங்கர வெடிப்பு: அதிகரிக்கும் சேதங்கள், விரையும் மீட்புக் குழுவினர்
அயர்லாந்தின் சேவை மையத்தில் பயங்கர வெடிப்பு.
சேதங்கள் பலமாக இருக்கலாம் என்பதால் சம்பவ இடத்திற்கு விரையும் மீட்புக் குழுவினர்.
அயர்லாந்தில் உள்ள சேவை மையத்தில் ஏற்பட்ட வெடிப்பு நிகழ்வில் பலர் படுகாயமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கோ டொனகல், க்ரீஸ்லோவ் (Co Donegal creeslough) பகுதியில் உள்ள சேவை மையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் பலத்த சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாக அயர்லாந்தின் தேசிய ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
— Erenagh (@interirish) October 7, 2022
மேலும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் அதிக எண்ணிக்கையில் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர நிகழ்வில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை போன்றவை இன்னும் தெளிவாக வெளிவரவில்லை.
உள்ளூர் செய்தி நிறுவனங்களின் தகவல் அடிப்படையில், கீழே விழும் குப்பைகளால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் சில சேதமடைந்துள்ளது.
google maps
அத்துடன் அடுக்குமாடி குடியிருப்பின் முக்கிய பகுதிகள் இந்த பயங்கர நிகழ்வால் மிகவும் மோசமான அளவுக்கு சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கவுன்சிலர் John O'Donnell ஸ்கை நியூஸிடம் தெரிவித்த தகவலில், "இது மிகவும் மோசமான நிகழ்வு, இவை பலத்த காயங்களை ஏற்படுத்தி உள்ளது மற்றும் இது மிகவும் சோகமான நிகழ்வு" என்றும் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு; பிரித்தானிய காவல் நிலையத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்: பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை
Sligo-அடிப்படையிலான கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மீட்பு 118 மற்றும் Mulroy கடலோர காவல்படை குழுவை உதவிக்கு அனுப்பியுள்ளதாக அயர்லாந்து கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.