நான்கு நாட்கள் தொடர்ந்து பெய்த அதீத மழை... ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி சம்பவம்
காலநிலை நெருக்கடியால் தூண்டப்பட்ட அதீத மழை மற்றும் நிலச்சரிவுகள், உலகின் மிகவும் அரிதான பேரினக் குரங்கு இனத்தின் எஞ்சியிருந்த எண்ணிக்கையில் 7 சதவீதத்தை அழித்துவிட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
58 பேரினக் குரங்குகள்
நவம்பர் 2025-இல் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் நான்கு நாட்களில் 1,000 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்ததைத் தொடர்ந்து, மிகக் கடுமையான அழிவின் விளிம்பில் உள்ள தபனுலி ஒராங்குட்டான்களில் (Pongo tapanuliensis) எஞ்சியிருந்த 800 எண்ணிக்கையில் 58 பேரினக் குரங்குகள் மரணமடைந்ததாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது உள்ளூர் எண்ணிக்கையில் 11 சதவீதத்திற்கும், அந்த முழு இனத்தின் எண்ணிக்கையில் 7 சதவீதத்திற்கும் சமமாகும். இந்தக் குரங்கினத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது இச்சம்பவம் என்கிறார் ஒரு நிபுணர்.
படாங் டோரு சுற்றுச்சூழல் அமைப்பின் மேற்குப் பகுதியில் உள்ள அதன் முதன்மை வாழ்விடத்தில், ஒராங்குட்டான் இனத்தின் மீது சென்யார் புயலின் தாக்கங்களைக் கணக்கிடுவதற்காக, விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் படங்களின் புதிய பகுப்பாய்வை குரங்கு அடர்த்தி மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டனர்.
ஏற்கனவே சுரங்கத் தொழில், பனை எண்ணெய் தோட்டங்கள் மற்றும் ஒரு பெரிய நீர்மின் திட்டம் ஆகியவற்றால் பேரினக் குரங்குகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
அதிதீவிர மழைப்பொழிவால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால், இந்த முக்கிய வன வாழ்விடத்தின் சுமார் 8,300 ஹெக்டேர் (20,510 ஏக்கர்) – அதாவது 11.7 சதவீதம் – அழிந்துபோனதை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
பேரதிர்ச்சியான இழப்பாகும்
மேலும், புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் மனிதனால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றம், மழையின் தீவிரத்தை 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட ஒரே ஒரு நிலச்சரிவு நிகழ்வில் சுமார் 58 பேரினக் குரங்குகள் மரணமடைந்தது, உலகின் மிக அரிதான இப்பெரிய மனிதக்குரங்கு இனத்திற்கு ஒரு பேரதிர்ச்சியான எண்ணிக்கை இழப்பாகும் என்று பேராசிரியர் ஜட்னா சுப்ரியட்னா கூறியுள்ளார்.
இந்த நிலையில் தபனுலி ஒராங்குட்டான்களின் நீண்டகால உயிர்வாழ்வை எவ்வாறு சிறப்பாக உறுதி செய்வது என்பது குறித்து ஆராய்வதற்கும், அதேவேளையில் மனித உயிருக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை மதிப்பிடுவதற்கும் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில்,
படாங் டோரு (Batang Toru) பகுதியில் நடைபெற்று வரும் அனைத்து முக்கியத் தொழில் நடவடிக்கைகளையும் இந்தோனேசிய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |