15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள்
கேரளாவில் தரையிறக்கப்பட்ட F-35B போர் விமானத்தின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு குறித்த விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
F-35B விமானத்தை கண்காணித்து
இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில், பிரித்தானியாவின் F-35B போர் விமானம் கடந்த 15 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
செயற்கைகோள் மூலம் F-35B விமானத்தை கண்காணித்து வருவதாக பிரித்தானிய இராணுவம் தெரிவித்தது.
இந்த நிலையில், F-35B போர் விமானத்தின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு குறித்த விவரங்கள் இரகசியமாக வைக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
மீண்டும் செயலில்
அதேபோல் இந்திய அரசாங்கத்துடனான தனிப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்த விவரங்களை பிரித்தானிய அதிகாரிகள் வழங்க மாட்டார்கள் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், பிரித்தானிய அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள், F-35B போர் விமானத்தின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு முடிந்ததும் கட்டாய பாதுகாப்பு சோதனைகளுடன், போர் விமானம் ராயல் விமானப்படையின் செயலில் மீண்டும் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், கடந்த 14ஆம் திகதி இரவு திருவனந்தபுரம் கடற்கரையில் இருந்து துயர சமிக்ஞையை வெளியிட்ட விமானத்தின் விவரங்கள், விமான ரேடார் தரவுகளின்படி தளத்தில் இருந்து அகற்றப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |