இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம்
இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை பிரித்தானிய ராணுவம் செயற்கைகோள் மூலம் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த ஜூன் 14-ஆம் திகதி அவசரமாக தரையிறங்கிய பிரித்தானியாவின் F-35B போர் விமானம், 2 வாரங்களுக்கு மேலாக Bay No. 4-ல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இங்கிலாந்திலிருந்து தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் பணியாளர்கள் வந்தவுடன், இன்று (சனிக்கிழமை) அதனை ஏர் இந்தியாவின் MRO ஹேங்கருக்கு மாற்ற வாய்ப்பு உள்ளது.
இந்த விமானத்தை நகர்த்த பிரித்தானியா தயங்குகிறது என இந்திய ஊடகங்களில் வந்த தகவல்களை, Royal Navy மறுத்தது.
"இந்த தாமதம், பாதுகாப்பு மீதான சந்தேகத்தால் அல்ல; தேவையான கருவிகள் மற்றும் நிபுணர்கள் இல்லாததால்" என்று அவர்கள் Independent செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.
Mark Martin என்ற விமான ஆய்வாளர், F-35B விமானம் தற்போது செயலிழந்த நிலையில் உள்ளது மற்றும் பிரித்தானிய ராணுவத்தின் செயற்கைக்கோள் கண்காணிப்பில் உள்ளது. அதனால், அதனை யாரும் தளர்த்த முடியாது என கூறினார்.
மேலும், இந்தியா-பிரித்தானியா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், இருநாடுகளும் ஒருவருக்கொருவர் ராணுவ சொத்துக்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளன என்றார்.
விமானத்தை இங்கே சரி செய்ய முடியவில்லை எனில், Royal Air Force C-17 Globemaster விமானம் மூலம் அதனை மீண்டும் பிரித்தானியாவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்த விமானம் இந்திய அரசும், விமானப்படையும் வழங்கிய விசேஷ அனுமதியுடன் இந்தியாவை வந்தடைந்தது. தற்போதைய வரை CISF படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |