AIயின் பிழையான அறிக்கையால் சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட இருந்த மோதல்
false ai report leads almost war between china and us: AIயின் பிழையான அறிக்கையால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட இருந்த சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
AIயின் பிழையான அறிக்கை
செயற்கை நுண்ணறிவின் தாக்கம், நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. ஆனால், செயற்கை நுண்ணறிவு முழுமையாக நம்பகத்தன்மை உடையது இல்லை என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
நிபுணர்களின் கூற்றுப்படியே, செயற்கை நுண்ணறிவு அவ்வப்போது பிழையான தகவல்களை வழங்கி வருகிறது.

அவ்வாறாக AI வழங்கிய பிழையான அறிக்கை ஒன்று, அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பை உருவாக்கியிருந்தது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வந்த சூழலில், மத்திய கிழக்கு கடல் பகுதியிலிருந்து சீன கப்பல் ஒன்று அணு ஆயுதத் திட்டதிற்கான பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வதாக அமெரிக்கா ராணுவத்திற்கு உளவு தகவல் அறிக்கை கிடைத்துள்ளது.
சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட இருந்த மோதல்
இதனையடுத்து, ஆயுதங்களுடன் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் கப்பலில் ஏற தயாராக இருந்தனர். அதே போல், அமெரிக்கா ராணுவ விமானங்களும் வானில் வட்டமிட தொடங்கியது.

இதனிடையே ராணுவ அதிகாரிகள் அந்த அறிக்கையை ஆய்வு செய்ததில், அது AI மூலம் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.
ஹவாயில் அமைந்துள்ள அமெரிக்க பசிபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளை மையத்திலிருந்து பெறப்பட்ட, கப்பலின் பயணிகளின் பட்டியல் குறித்த உளவுத் தகவல்களை ஆய்வாளர் ஆய்வு செய்தபோது இந்தச் சம்பவம் தொடங்கியது.
அந்த ஆய்வாளர் பயன்படுத்திய AI மென்பொருள், கப்பல் கொண்டு சென்ற பொருளைத் தவறாக அடையாளம் கண்டதை அதிகாரிகள் உறுதிசெய்ததை அடுத்து, அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விவரித்த அமெரிக்கா ராணுவ அதிகாரிகள், "அந்த உளவுத்துறை அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆனால் கிட்டத்தட்ட ஒரு போரைத் தொடங்கிவிட்டது" என தெரிவித்துள்ளனர்.
அந்தக் கப்பல் உண்மையில் எதை ஏற்றிச் சென்றது, எங்கு சென்றுகொண்டிருந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
AI தொழில்நுட்பம் மனித கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கக்கூடும், AI இன்னும் சில ஆண்டுகளில் மனித குலத்தையே அழித்து விட வாய்ப்புள்ளதாக Open AI மற்றும் Anthropic ஆகிய முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றிய ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்த பின்னர் தங்களது பணியை ராஜினாமா செய்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.