ரூ.150 கோடி மதிப்பிலான இடத்தை எம்பியின் டிரைவருக்கு பரிசளித்த பணக்கார குடும்பம்
சிவசேனா எம்.பியின் டிரைவருக்கு திடீரென ரூ.150 கோடி மதிப்பிலான நிலத்தை செல்வாக்கு மிகுந்த குடும்பம் ஒன்று பரிசாக கொடுத்துள்ளது.
ரூ.150 கோடி மதிப்பிலான நிலம் பரிசு
இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் சலார் ஜங்க் என்ற வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்கள். இந்த குடும்பத்தினர் கடந்த காலத்தில் ஐதராபாத் நிஜாம்களிடம் பணியாற்றியுள்ளனர்.
இவர்களுக்கு கோடிக்கணக்கில் மதிப்பிலான நிலங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, மகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா எம்.பி.சந்தீபன்ராவ் பூம்ரேவிடம் ஜாவேத் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், டிரைவராக பணியாற்றி வரும் ஜாவேத்திற்கு இந்த குடும்பத்தினர் மகாராஷ்டிராவில் சுமார் ரூ.150 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கியுள்ளனர்.
ஆனால், டிரைவர் ஒருவருக்கு பரிசுப் பத்திரம் ஏன் கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக மாநில பொருளாதார குற்றப்பிரிவு பொலிஸார் சிவசேனா எம்.பி. மற்றும் அவரது மகன் மற்றும் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது டிரைவர் கூறுகையில், "லார் ஜங் குடும்பத்தின் சந்ததியினருடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. இதனால் தான் அவர்கள் நிலத்தை பரிசாக கொடுத்துள்ளனர். புலனாய்வாளர்கள் கேட்ட விவரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளேன்" என்றார்.
வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |