கியூபா எரிபொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து: பரபரப்பு வீடியோ காட்சிகள்!
கியூபாவில் உள்ள முதன்மை எரிபொருள் கிடங்கில் வெள்ளிக்கிழமை மிகப் பயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில் அதனை கட்டுப்படுத்த மெக்சிகோவில் இருந்து வல்லுநர்கள் Matanzasக்கு வந்தடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கியூபாவில் எரிப்பொருள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கரமான தீயினால் குறைந்தது ஒருவர் உயிரிழந்து இருப்பதாகவும், 121 பேர் வரை காயமடைந்துள்ளனர் மற்றும் 17 தீயணைப்பு வீரர்கள் வரை காணாமல் போயுள்ளனர் என அந்த நாட்டின் எரிசக்தி அமைச்சர் நிக்கோலஸ் லிவன் அரோன்டே குரூஸ் தெரிவித்துள்ளார்.
முதல் யூனிட் மின்னலால் தீப்பிடித்து எரிந்த பிறகு மேலும் இரண்டு டாங்கிகள் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
More photos from the fire at the oil depot in #Cuba pic.twitter.com/QhFBxhfV8K
— NEXTA (@nexta_tv) August 7, 2022
இந்தநிலையில் கியூபா எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட பாரிய தீயினை அணைக்க மெக்சிகோவில் இருந்து மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு போயிங் 737-700 விமானப்படை அனுப்பப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: தானியங்களுடன் தொடர்ந்து வெளியேறும் சரக்கு கப்பல்கள்: அச்சங்கள் நீடிக்கின்றன என ஜெலென்ஸ்கி கருத்து!
மெக்சிகோ, வெனிசுலா, ரஷ்யா, நிகரகுவா, அர்ஜென்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகள் கியூபாவிற்கான நிதி உதவிகளை அளித்தன என்று கியூபா ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல் தெரிவித்துள்ளார்.