தானியங்களுடன் தொடர்ந்து வெளியேறும் சரக்கு கப்பல்கள்: அச்சங்கள் நீடிக்கின்றன என ஜெலென்ஸ்கி கருத்து!
உக்ரைனில் இருந்து மேலும் நான்கு கப்பல்கள் தானியம் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு பாதுகாப்பு வழித்தடம் வழியாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய மில்லியன் டன் கணக்கான தானியங்கள் உக்ரைனிலேயே சிறைப்பிடித்து வைக்கப்பட்டு இருந்தது.
இது பல்வேறு நாடுகளில் உணவு தட்டுப்பாடு மற்றும் அதிக உணவு விலையேற்றம் ஆகியவற்றிக்கு வழிவகுத்தது.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை, துருக்கி, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகியவை மேற்கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை குறிவைக்க வேண்டாம் என்று ரஷ்யா அறிவித்தது.
GETTY IMAGES
இதன் அடிப்படையில் கடந்த வாரம் உக்ரைனின் ஓடேசா துறைமுகத்தில் இருந்து முதல் சரக்கு கப்பல் தானியங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையான இன்று தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு நான்கு சரக்கு கப்பல்கள் ஒடேசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் ஆகிய துறைமுகங்களில் இருந்து வெளியேறி உள்ளன.
இவற்றில் இரண்டு கப்பல்கள் துருக்கிக்கும், மற்றவை இத்தாலி மற்றும் சீனாவிற்கும் செல்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானிய ஏற்றுமதி பாதுகாப்பானது என்பதற்கான நல்ல அறிகுறிகள் இருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்நாட்டின் துறைமுகங்களுக்குத் திரும்புமாறு நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளனர்.
Reuters
கூடுதல் செய்திகளுக்கு: நீர் பூங்காவில் காணாமல் போன 11 வயது சிறுமி...பிரித்தானியாவில் நிகழ்ந்த துயரம்!
ஏற்றுமதியானது உலகளாவிய உணவு நெருக்கடியை எளிதாக்கும் அதே வேளையில் மிகவும் தேவையான வெளிநாட்டு நாணயத்தை கொண்டு வரும் என்பது நம்பிக்கை, ஆனால் அச்சங்கள் நீடிக்கின்றன. ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதை வரவேற்றார்.