ஐரோப்பிய நாடான நோர்வேவில் தாக்குதல் நடத்தியவர் இவர் தான்! முதன் முறையாக வெளியான புகைப்படம் மற்றும் முழு விபரம்
நோர்வேவில் வில்-அம்பை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு தலைநகரான Oslo-வில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள Kongsberg நகரின் மையப்பகுதியில் மக்கள் கூடியிருந்த இடத்தில் நடந்தது.
இதன் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
37 வயது மதிக்கத்தக்க Espen Andersen Brathen என அறியப்படும், இவரை பொலிசார் சம்பவ இடத்தில் இருந்து துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர். இது பயங்கரவாத செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த நபர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அதில், ஹலோ நான் ஒரு தூதர். எச்சரிக்கையுடன் வருகிறேன். இஸ்லாமியர் என்பதற்கு சாட்சியாக என்று பேசியுள்ளார்.
டென்மார்க் தாய் மற்றும் நோர்வேயின் தந்தைக்கு பிறந்த இவர், டென்மார்க் குடிமகன் ஆவார். பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த இவர், மன நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்ததாக, டென்மார்க் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் மீது திருட்டு, கஞ்சா வைத்திருந்தது போது குற்றங்கள் இருந்ததாகவும், கடந்த 2020-ஆம் ஆண்டு தன்னுடைய தந்தையை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதால், இவர் பெற்றோரை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிட்டுள்ளது.
தற்போது இவன் என்ன காரணத்திற்கு இப்படி செய்தான் என்ற முழு விபரம் வெளியாகவில்லை. ஆனால், அதே சமயம் அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.