உலகப் போர் அச்சம்... இரகசியமாக அணு ஆயுதங்களை குவித்துள்ள ஐந்து நாடுகள்
உலகப் போர் அச்சுறுத்தல் காரணமாக உலகின் அணு ஆயுத சேமிப்பின் அளவு பல நாடுகளில் சத்தமின்றி அதிகரித்துள்ளது.
9 நாடுகளிடம்
உத்தியோகப்பூர்வமாக, கடந்த 40 ஆண்டுகளில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகிய 5 நாடுகளும் அணு ஆயுத குவிப்பில் ஈட்பட்டுள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
ஆனால், 2024ல் அமெரிக்காவின் FAS அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் இன்னும் 3 நாடுகள் சத்தமின்றி அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களைக் குவித்து வருவதாக எச்சரித்துள்ளது.
மட்டுமின்றி, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அவர்களின் அணு ஆயுத தளங்களில் புதிய கட்டுமானங்களை எழுப்புவதாக தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, இரகசிய பகுதி ஒன்றில் அணுசக்தி சோதனைத் திட்டங்களை மீண்டும் தொடங்கப்போவதாக அமெரிக்க அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்துள்ளது.
FAS அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 நாடுகளிடம் மொத்தம் 12,121 அணு ஆயுதங்கள் இருப்பதாக உறுதி செய்துள்ளது. ரஷ்யா பல நூறு எண்ணிக்கைகளால் அமெரிக்காவை முந்தியுள்ளது.
இந்த இரு நாடுகளும் மொத்தமுள்ள அணு ஆயுதங்களில் 88 சதவிகிதத்தை தங்கள் கைவசம் வைத்துள்ளது. ரஷ்யாவிடம் 5,580 அணு குண்டுகளும் அமெரிக்காவிடம் 5,044 எண்ணிக்கையும் உள்ளது.
தயார் நிலையில்
எஞ்சிய 1,500 அணுகுண்டுகளை சீனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், வட கொரியா, பாகிஸ்தான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைவசம் வைத்துள்ளன.
இதனிடையே, தனது நிபந்தனைகளை ஏற்க மறுத்த உக்ரைன் ஜனாதிபதியை மிரட்டி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றிய ஜனாதிபதி ட்ரம்பால் மீண்டும் உலகப் போர் அச்சுறுத்தல் வெடித்துள்ளது.
மட்டுமின்றி, தங்கள் மீது விதிக்கப்பட்ட 20 சதவிகித வரிகளுக்கு எதிராக கொந்தளித்துள்ள சீனா, வர்த்தகப் போர் அல்லது எந்த வகையான போருக்கும் சீனா தயார் என அறிவித்துள்ளது.
இதனிடையே, ஒரு பெரிய போர் வெடித்தால் ரஷ்யாவை தோற்கடிக்கும் திறன் தங்களிடம் இருப்பதாக ஐரோப்பிய தலைவர்கள் பகிரங்கமாக அறிவித்து வருகின்றனர்.
இப்படியான ஒரு நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்று அது நடப்பது போல் தெரிகிறது என ஐரோப்பிய நாடுகளின் மாநாடு ஒன்றில் போலந்தின் பிரதமர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க, ரஷ்ய, பிரித்தானியா மற்றும் பிரான்சின் 2100 அணு குண்டுகள் தயார் நிலையில் உள்ளன என்றும் சில நிமிடங்களில் அதனைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும் என்றும் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |